Header Ads



சவூதியின் தாராள மனசு - இலங்கையரான கொலை குற்றவாளிக்கு, ஒருதொகை பணம் வழங்கியது

தமது நாட்டில் கொலைக்குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜை ஒருவருக்கு அதிலிருந்து தப்பித்துக் கொள்ள வழங்கப்படும் அபராத பணத்தின் ஒரு பகுதியை சவுதி அரசாங்கம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை பிரஜைக்கும் தன்னுடைய சக தொழிலாளிக்கும் ஏற்பட்ட முறுகலிலேயே இந்த கொலை சம்பவம் இடம் பெற்றுள்ளதாக சவுதியில் உள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரியான Faizer Mackeen தெரிவித்துள்ளார்.

குறித்த இலங்கை பிரஜை சீதுவ பகுதியை சேர்ந்தவர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்றதாகவும் சக தொழிலளியை பல முறை சந்தேகநபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்பளித்ததுடன், மரண தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமாயின் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூபா 2 மில்லியன் அபராத பணம் (இரத்த பணம்) வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, குறித்த இலங்கை பிரஜை மது அருந்தியதற்காகவும்,மது சாரம் காய்ச்சிய குற்றத்திற்காகவும் அவருக்கு 60-70 சவுக்கடிகள் வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

11 comments:

  1. கொலை செய்யப்பட சக தொழிலாளி சவுதியை சேர்ந்த அரபியர் இல்லை என்பதால் இப்படி ஒரு முடிவா அல்லது ரிசானா நபீக் கொலையில் ஏற்பட்ட கெட்ட பெயரை துடைத்துக் கொள்வதற்கான முயற்சியா என்று தெரியவில்லை.

    ReplyDelete
  2. It is wrong brother Yasmin. In Rizana case Saudi parents did not accept any such money to ease or release Rizana .
    If the Saudi patents accept such money sure 101% Saudi government would release the funds from charity to help Rizana .

    But in this case the victim''s family accepted such money for releasing this man, so it is possible to proceed the matter .

    We should not mix up the cases for the justice.

    ReplyDelete
  3. theriyathu but ithu nalla seyal ithai paratugal

    ReplyDelete
  4. yasmin,மார்க்க விஷயம் கவனமாக இருக்கவும்,தாறுமாறாக பேசி நரகத்தை வாங்கிக்கொள்ளாதே

    ReplyDelete
  5. Yasmin Lafir has not knowledge about Islam and Islamic Law, so at least please pray Allah five times per day.

    ReplyDelete
  6. நல்ல பதில் mohamed bawa

    ReplyDelete
  7. Mr.yaseen,நீங்கள் சொல்லும் கருத்து உங்களின் தனிப்பட்ட மூளையில் உருவானது.இரத்த நஷ்ட ஈடு கோரும் உரிமையும் பழிக்குப்பளி சமனாக வழங்க வேண்டும் என்ற முடிவுக்கு வரும் உரிமை பாதிப்படைந்தவரின் வாரிசுக்குஉண்டு ,இதில் றிஸானா றபீக்கின் விடயம் கொலை செய்யப்பட்டதற்கு (அல்லாஹு அஃலம்)றிஸானாக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது அத்தோடு இரத்த நஷ்ட ஈட்டுக்கான வழியும் கொடுக்கப்பட்டது ஆனால் கொலை செய்யப்பட்ட குழந்தையின் தாய் விரும்வில்லை அது அந்த பெண்ணின் உரிமை அதில் சவுதி மன்னரும் தலையோட்ட முடியாது காரணம் இது அல்லாஹ் கட்டளை அதனை மீறிச்செசெயல்பட்டு நரகம் போக எவனும் விரும்பமாட்டான் சவுதி மன்னர் இந்த உலகில்தான் மன்னர் அல்லாஹ்விடம் கூனிக்குறிகி நிற்க வேண்டிய அடிமைதான்.றிசானாவின் விடயத்தில் நமது நாட்டு அரசாங்கமும் சவுதி அரசும் முயற்சி எடுத்தது ஆனால் அந்தப் பெவிரும்பவில்லை .விரும்பி இருந்தால் தற்போது நடக்கக்கூடிய இரத்த நஷ்டா ஈட்டுத் தொகைக்கும் சவுதி அரசு குறிப்பிட்ட அளவு உதவி செய்துதான் இருக்கும் காரணம் அந்த பிரச்சினை உலகளாவிய ரீதியில் பரப்பப்பட்டு இருந்தது.சவுத்காறனோடு நாம் கோபித்துக்கொண்டு குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் எதிராக கருத்து வெளியிடுவது பெரும் பாவத்தில் கொண்டுபோய் சேர்த்து விடும் .கருத்து எழுத எல்லோருக்கும் முடியும் ஆனால் அது பெரும் பாவத்துக்குள் தள்ளிவிடாமல் பாதுகாக்க வேண்டும் இல்லையேல் வாய் மூடி இருப்பது நன்மையும் இல்லை பாவாமும் இல்லை.எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவரையும் ஹக்கை விளங்கி நடக்கக்கூடிய நன்மக்களாக ஆக்கி அருள் புரிவானாக ஆமீன்.

    ReplyDelete
  8. நல்ல பதில் பாவா சகோதரர் .

    ReplyDelete
  9. நல்ல பதில் சகோதரர் பாவா அவர்களின் reply

    ReplyDelete
  10. I respect sharia law. But in this technology world simply they can prove her age even her document showing she is over age. I don’t know why this was not done?

    Case was not investigated in a proper way.

    ReplyDelete

Powered by Blogger.