Header Ads



ஐக்கிய தேசியக் கட்சியில், மிகப்பெரிய மறுசீரமைப்பு - ரணில் அறிவிப்பு

பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகளுக்கு மத்தியில் சளைக்காது ஐக்கிய தேசியக் கட்சியை 70 ஆண்டுகள் முன்னெடுத்து கொண்டு சென்றது போல் இலங்கை எதிர்காலத்தை முன்னேறிய உலகத்தை நோக்கி இட்டுச் செல்ல முதன்மையாக இருந்து செயற்பட போவதாக அந்த கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பியமக மல்வானை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் முதல் பிரதமரான டி.எஸ். சேனாநாயக்க அனைத்து இன, மதங்களை ஒன்றிணைத்து உருவாக்கிய கட்சியின் முன்னோக்கிய பயணத்தை நிறுத்த போவதில்லை.

முன்னோக்கிய பயணத்தை மேலும் வலுப்படுத்த அடுத்த இரண்டு வருடங்களுக்குள் கட்சியில் மிகப் பெரிய மறுசீரமைப்பை மேற்கொள்ள உள்ளோம் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.