Header Ads



கொழும்பில் எத்தனை சட்டவிரோத வியாபாரங்கள், நடைபெறுகின்றன தெரியுமா..?

கொழும்பு நகரில் காட்டுச் சட்­டத்­துக்கு ஒரு போதும் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை எனத் தெரி­வித்­துள்ள மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபா செப்­டெம்பர் மாதம் 15 ஆம் திக­திக்குப் பின்பு கொழும்பு நகரில் சட்ட விரோ­த­மாக நடை­பாதை வியா­பா­ரங்­களில் ஈடு­பட்­டி­ருப்போர் அகற்­றப்­ப­டு­வார்கள் என்றும் எச்­ச­ரிக்கை  விடுத்­துள்ளார்.

சட்­ட­வி­ரோத அறி­விப்பு பல­கைகள் மற்றும் கை தள்­ளு­வண்­டிகள் என்­ப­னவும் கொழும்பு நகரில் தடை செய்­யப்­படும் எனவும் அமைச்சர் பைசர் முஸ்­தபா தெரி­வித்­துள்ளார்.

நேற்று முன்­தினம் மாலை அமைச்சர் பைசர் முஸ்­தபா கொழும்பு நகரின் நடை­பாதை வியா­பா­ரி­களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடாத்­திய போதே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் அங்கு கருத்து வெளி­யி­டு­கையில் கொழும்பு நகரில் நடை­பாதை வியா­பா­ரத்­தினால் பாத­சா­ரிகள் பெரிதும் சிர­மங்­க­ளுக்­குள்­ளா­கி­றார்கள்.

இதற்­கான தீர்­வா­கவே நடை­பாதை வியா­பாரம் தடை­செய்­யப்­ப­டு­கி­றது என்றார்.

கொழும்பு நகரின் முதலாம் குறுக்­குத்­தெரு, இரண்டாம் குறுக்குத் தெரு, ஐந்தாம் குறுக்குத் தெரு, மல்­வத்தை வீதி, ஒல்கொட் மாவத்தை, பிர­தான வீதி மற்றும் போதி­ராஜ மாவத்தை ஆகிய பகு­தி­களில் வாக­னங்கள் நிறுத்­து­வதை தடை­செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு அமைச்சர் பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்டார்.

இன்று கொழும்பு நடை­பா­தை­களை வியா­பா­ரிகள் ஆக்­கி­ர­மித்து கொண்­டி­ருக்­கி­றார்கள். பாதசாரிகள் வீதி­க­ளிலே நடக்­கி­றார்கள். இந்த நிலை­மையை தொடர்ந்தும் கொழும்பு நகரில் அனு­ம­திக்க முடி­யாது.

அர­சி­யல்­வா­தி­களின் கடி­தங்­க­ளுக்­காக நடை­பாதை களில் வியா­பாரம் செய்ய அனு­ம­திக்க முடி­யாது.

கடந்த அர­சாங்கம் கொழும்பு நகரை அழ­கு­ப­டுத்த எடுத்த முயற்­சிகள் எமக்கு உதா­ர­ண­மாக இருக்க வேண்டும். கொழும்பு எமது தலை­ந­க­ர­மாகும்.

கொழும்பு நகரில் 1,158 சட்­ட­வி­ரோத நடை­பாதை வியா­பா­ரிகள் வியா­பா­ரத்தில் ஈடு­பட்­டுள்­ளார்கள் என பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். பொலிஸ் சூழல்­பா­து­காப்பு பிரிவின் புள்­ளி­வி­ப­ரப்­படி சட்­ட­வி­ரோ­த­மாக 720 பேர் நடை­பாதை வியா­பா­ரத்தில் ஈடு­பட்­டி­ருக்­கி­றார்கள். 

லொத்தர் விற்­பனை கூடங்கள் 221 மற்றும் வாக­னங்­களில் 120 விற்­பனை நிலை­யங்­களும் நடை­பா­தையில் சட்­ட­வி­ரோ­த­மாக இயங்கி வரு­கின்­றன.

சட்­ட­வி­ரோ­த­மாக கை தள்­ளு­வண்­டிகள் 52, பத்­தி­ரிகை விற்­பனை செய்யும் கூடங்கள் 45 அமைந்­துள்­ளன.

நடை­பா­தை­களில் வாக­னங்­களில் விற்­பனை கூடங்கள் இயங்கி வரு­வதால் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கும் பாத­சா­ரி­க­ளுக்கும் இடை­யூ­ராக அமைந்­துள்­ளன. இதனால் பாத­சா­ரிகள் விபத்­து­களை எதிர்­நோக்க வேண்­டி­யுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கி­றார்கள்.

சட்­ட­வி­ரோ­த­மாக நடை­பாதை வியா­பா­ரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கொழும்பு மாநகர சபையால் மாற்றிடம் இனம் காணப்பட்டுள்ளது.

அத்தோடு பத்திரிகை விற்பனை கூடங்கள் ,லொத்தர் விற்பனை கூடங்கள் என்பன மாநகர சபையினால் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் மாத்திரமே இயங்க முடியும் என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

விடிவெள்ளி ARA.Fareel

1 comment:

  1. கோதாபய ராஜபக்ச செய்த ஒரு நல்ல காரியம் கொழும்பு நகரை சுத்தம் செய்தது. ஆனால் என்ன அவர் சுத்தம் செய்துவிட்டு பின்னால் பல வியாபார ஸ்தலங்களை சிங்களவர்களுக்கு மாத்திரமே கொடுத்தார்.
    மூவினங்களும் வாழும் ஒரு இடத்தில் பாகுபாடு பார்த்து சேவை செய்தால் அந்த நகரம் பின்னடைவை எதிர்கொள்ளும்.
    A city can become a metropolitan city if they fill fill and respect everyone's need and give them equal rights.

    ReplyDelete

Powered by Blogger.