Header Ads



மைத்திரி மீது நம்பிக்கை கொண்டுள்ள முஸ்லிம்கள், ஹக்கீம் மீது சந்தேகம் கொள்கிறார்கள் - ஹிஸ்புல்லா


-விடிவெள்ளி-

முஸ்லிம் காங்­கி­ரஸின் எந்­த­வொரு உறுப்­பி­னரும் இது­வரை பகி­ரங்­க­மாக வடக்­கி­லி­ருந்து கிழக்கு பிரிய வேண்­டு­மென பேச­வில்லை. இந்த நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரசும் வட கிழக்கு இணைப்­புக்கு இர­க­சி­ய­மாக இணக்கம் தெரி­வித்­துள்­ளதா என்ற சந்­தேகம் எங்­க­ளுக்­கி­ருக்­கின்­றது என மீள்­கு­டி­யேற்ற புனர்­வாழ்வு புன­ர­மைப்பு இரா­ஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்தார்.

காத்­தான்­கு­டி­யி­லுள்ள மட்­டக்­க­ளப்பு பல்­க­லைக்­க­ழக கல்­லூரி மண்­ட­பத்தில் நேற்று  நடாத்­திய ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­ன்போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். இங்கு தொடர்ந்து கருத்து தெரி­வித்த அவர், 
கிழக்கு மாகாண முஸ்­லிம்­களின் உணர்­வையும் அபி­லா­ஷை­க­ளையும் சர்­வதேச சமூ­கத்­திற்கும் பாரா­ளு­மன்­றத்­திற்கும் ஏனைய தமிழ் கட்­சி­க­ளுக்கும் மிகவும் தெளி­வாக சொல்ல வேண்­டிய தேவை முஸ்லிம் அர­சியல் தலை­மை­க­ளுக்­குண்டு.

முஸ்லிம் சமூகம் சார்ந்த முஸ்­லிம்­களின் அபி­லா­ஷைகள் எப்­படி இருக்க வேண்­டு­மென்று முஸ்லிம் சமூகம் சொல்­லாமல் அமை­தி­யாக இருந்தால் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு சொல்­வ­தையும் சர்­வ­தேச சமூகம் சொல்­வ­தையும் ஏற்­றுக்­கொண்­ட­தா­கி­விடும்.

முஸ்­லிம்­க­ளு­டைய அதி­க­மான செல்­வாக்கைப் பெற்ற  மிக முக்­கி­ய­மான கட்­சிதான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ர­சாகும்.

முஸ்லிம் காங்­கிரஸ் தலை­மைத்­துவம் சில நேரங்­களில் தமது பேச்­சுக்­களில் வட கிழக்கு இணைந்தால் என்ன என்ற அடிப்­ப­டை­யிலும் பேசி வரு­கின்­றது. இது­வ­ரை­யிலும் வட கிழக்கு பிரிய வேண்­டு­மென சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைமை பேச வில்லை. இது எமக்கு சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது.

கிழக்கு மாகா­ணத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்­றவன் என்ற அடிப்­ப­டையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் ஆரம்ப போராளி என்ற அடிப்­ப­டையில் முஸ்லிம் காங்­கிரஸ் எதற்­காக உரு­வாக்­கப்­பட்­டது என்­பதை புரிந்­தவன் என்ற அடிப்­ப­டையில் வடக்­கி­லி­ருந்து கிழக்கு பிரிய வேண்­டு­மென்­பதை பேசி­யாக வேண்டும்.

முஸ்லிம் அர­சியல் தலை­மை­க­ளில் எல்­லோரும் பேசாமல் இருந்தால் முஸ்­லிம்கள் வட கிழக்கு இணைப்பை ஏற்றுக் கொண்­டுள்­ளார்­களா? முஸ்­லிம்கள் அமை­தி­யாக இருக்­கின்­றார்கள்; ஆகவே முஸ்­லிம்­களும் இதற்கு ஆதர­வா­ன­வர்­கள் என்று அரா­சங்­கமும் கரு­தலாம்.

ஆகவே வடக்­கி­ல­ிருந்து கிழக்கு பிரிய வேண்­டு­மென தொடாச்­சி­யாக நாங்கள் பேசி வரு­கின்றோம். அத­ன­டிப்­ப­டையில் முன்னாள் அமைச்சர் அதா­வுல்லாஹ் பேசி வரு­கின்றார்.

அதே போன்று நான் மிகத்­தெ­ளி­வாக பாரா­ளு­மன்­றத்­திலும் கட்சி தலை­வர்­களின் கூட்­டத்திலும் பகி­ரங்­க­மாக பேசி வரு­கின்றேன்.

கிழக்­கிலே இருந்து முஸ்­லிம்கள் தொடர்­பான அல்­லது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தொடர்­பான விழிப்­பு­ணர்வு ஏற்­பட வேண்­டு­மென்­பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்­து­மில்லை.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­சவின் செயற்­பாட்­டினால் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து முஸ்­லிம்கள் ஓர­மாகி இருக்­கின்­றார்கள்.

எமது ஐக்­கிய மக்கள் சுந்­தி­ரக்­கூட்­ட­மைப்­புக்கு இருந்த கணி­ச­மான வாக்­குகள் எங்­களை விட்டும் பிரிந்­தி­ருக்­கின்­றது.

தற்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனா அவர்­களின் தலை­மைத்­து­வத்தின் கீழ் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு, ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி மீண்டும் சகல இனங்­க­ளையும் உள்­வாங்கி ஒன்று சேர்த்து எங்­க­ளு­டைய நிரு­வா­கத்­தையும் செற்­பாட்­டையும் ஆரம்­பித்­தி­ருக்­கின்றோம்.  

ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பை, ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியை முஸ்லிம் பிர­தே­சங்­களில் மீண்டும் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தென்­பது கஷ்­ட­மான காரி­ய­மில்லை.

கிழக்கு மாகா­ணத்தின் மூன்று மாவட்­டங்­க­ளிலும்  சுதந்­திரக் கட்­சிக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மாகாண சபை உறுப்­பி­னர்கள் உள்ளூராட்சி மன்­றங்கள் இருந்­தன. அவைகள் தற்­போது ஓர­மா­கி­யி­ருக்­கின்­றன.

எதிர்­வரும் ஆண்டு முதல் பகு­தியில் நடை­பெறும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் கிழக்கு மாகா­ணத்தில் கணி­ச­மான ஆச­னங்­களை ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கட்சி கைப்­பற்­று­வ­தற்­காக நாங்கள் நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றோம். அதற்­காக ஜனா­தி­பதி என்னை அழைத்து கட்­சியைப் பலப்­ப­டுத்­து­மாறு கூறி­யுள்ளார்.

முஸ்­லிம்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனா மீது நம்­பிக்கை வைத்­துள்­ளார்கள். முஸ்­லிம்கள் முஸ்லிம் காங்­கிரஸ் மீது நம்­பிக்கை இழந்­துள்­ளார்கள்.

முஸ்லிம் காங்கிரசிலிருந்த நம்பிக்கை இழக்கப்பட்டிருக்கின்றது.  ஆகவே அந்த மக்களுக்கு நாங்கள் ஒரு தலைமைத்துவத்தை கொடுக்க வேண்டும். அவர்களை நாங்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஒன்று சேர்த்து அந்தப் பணியை செய்யவுள்ளோம்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் எங்களுக்குமிடையில் ஒரு புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் என்பதையே நான் விரும்புகின்றேன்.

முட்டி மோதிக்கொண்டு தொர்ச்சியாக இருக்க முடியாது. நாங்கள் பிளவும் படவும் கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

3 comments:

  1. Electionla HISBULLA WA TOKKA SEYTATU AEN AWAR MEETU MAKKALUKKU NAMBIKKAI ILLAI. HISBULLAWUKKU MAITREE KODUTHTHA PICHCHAI INDA PADAVI.HAKEEM MEETU MAKKAL IRUPPATANAL THAN AWAR WENDRAR. ADUTHTHA MURAYUM HISBULLAH UNGALUKKU AAPPU THAN.TOLVI NICHCHIYAM.

    ReplyDelete
  2. உண்மை சொன்னீர்கள் ஹிஸ்புள்ளா அவரகளே சில விடயங்களை தவிர,முஸ்லிம்களுக்கு என்று ஒரு தனித்துவமான தனியான கட்சி வேன்டும் அது இப்போது உள்ள முஸ்லிம் காங்கிரஸ் அல்ல

    ReplyDelete

Powered by Blogger.