Header Ads



ஜோன் கெரி, ஜனாதிபதி மைத்திரியை சந்தித்தார் - பரீஸ் உடன்பாட்டிற்கும் ஒப்புதல் வழங்கினார்


ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் நகருக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனக்கும் அமெரிக்க அரசின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (21) பிற்பகல் நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.

2

காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்படிக்கையினை இலங்கையில் அமுல்படுத்துவது தொடர்பான ஒப்புதல் அறிக்கையினை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (21) நியூயோர்க்கில் இடம்பெறும் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் வைத்து ஐநாவின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்களிடம் கையளித்தார்.


No comments

Powered by Blogger.