Header Ads



கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி, அப்துல் கபார் இடமாற்றம்

கல்முனை பொலிஸ் நிலையத்தின் தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ. அப்துல் கபார் கம்பஹா பொலிஸ் நிலைய தலைமைப்பொலிஸ் பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் 13 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடம்பெற்ற இடமாற்றத்தில் பொறுப்பதிகாரி கபாரின் இடமாற்றமும் ஒன்று.

இதுவரைகாலமும் பொறுப்பதிகாரி கபார் கல்முனைப்பிராந்தியத்திற்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி மருதமுனை நற்பிட்டிமுனை போன்ற பிரதேச அமைப்புகள் மக்கள் பாராட்டுவைபவத்தை வைத்து வழியனுப்பிவைத்தனர்.

தற்போது அவர் கம்பஹா பொலிஸ் நிலையத்திற்கு சென்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

பல இனத்தவராலும் வெகுவாக விரும்பப்படும் பொலிஸ் அதிகாரி அப்துல் கபார் ஒரு பிரதம பொலிஸ் பரிசோதகராவார்.

இற்றைக்கு இருபது வருடங்களுக்கு முன்பு சம்மாந்துறை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியாகவும் அப்துல் கபார் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.