Header Ads



இப்றாஹீம் அன்சார் மீது தாக்குதல் - தமிழ்த் தேசியக் கூட்மைப்பு கண்டனம்

மலேசியாவில் இலங்கை தூதுவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்மைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இவ்வாறான வன்முறைச் சம்பவங்களை தமிழ் இளைஞர்கள் கைவிடவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பட்டிருப்பு பிரதேசத்தில் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் நிலையத்தின் காரியாலயம் இன்று -09- திறந்து வைக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். இதேவேளை, இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மா.நடராஜா, ஞா.கிருஸ்ணபிள்ளை, இரா.துரைரெட்னம் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.