Header Ads



வடமாகாண முஸ்லிம்களை, புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்யவில்லை - அரியநேத்திரன்

கிழக்கு மாகாணத்தில் 1990ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம் மக்களை, அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் திட்டமிட்டு தூண்டிவிட்டதனாலேயே, தமிழருக்கு எதிரான இனப்படுகொலைகள் இடம்பெற்றதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் குரோத மனப்பான்மை பரவும் என்ற அச்சம் காரணமாகவே வட பகுதியில் இருந்த முஸ்லிம் மக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் உயிராபத்து இன்றி பாதுகாப்பாக வெளியேற்றினார்களே தவிர, திட்டமிட்டு இன சுத்திகரிப்பு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

வடபகுதியில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மன்னிப்பு கோரப்பட்ட போதிலும் பலர் இன்றுவரை இன சுத்தகரிப்பு என்ற வார்த்தைப் பிரயோகத்தை கூறி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் குரோத மனப்பான்மை ஏற்படக்கூடாது என்பதற்காகவே, விடுதலைப் புலிகள் முஸ்லிம் மக்களை வடக்கிலிருந்து வெளியேற்றினார்களே தவிர, திட்டமிட்டு இன சுத்திகரிப்பு செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பில் கடந்த 1990 ஆண்டு இடம்பெற்ற இனப்படுகொலையின் நினைவு தினம் இன்று -21- அனுஸ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பா. அரியநேத்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பு இனப்படுகொலை நினைவு தினத்தில் மக்களை அணிதிரட்டி நடத்துவதற்கு கூட நல்லாட்சியில் அச்சமான சூழல் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற புதுக்குடியிருப்பு இனப் படுகொலையின் ஊடாக முஸ்லிம் ஊர்காவற்படையினர் செய்திருக்கின்றார்கள் என பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி தான் ஆட்சி செய்திருந்தது. 1990ம் ஆண்டுக்கு காலத்திற்கு முற்பட்ட காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதம் ஏந்திப் போராடினார்கள்.

ஆகவே முஸ்லிம் இளைஞர்களை தமிழ் மக்களிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்ற தேவை இலங்கை அரசாங்கத்திற்கு இருந்தது. அதற்கு எதிராகத்தான் முஸ்லிம் ஊர்காவற்படையினரை பிரித்தாழும் தந்திரத்தை செய்ததன் காரணமாக முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் பாரிய விரோத நிலை ஏற்பட்டது.

இதற்கு முக்கிய காரணமாக இருந்தது அரசாங்கம். குறிப்பாக அம்பாறை வீரமுனைப் படுகொலையில் இருந்து முஸ்லிம் ஊர்காவற்படையினர் நேரடியாகப் பங்குபற்றியிருக்கின்றார்கள். தொடர்ச்சியாக இடம்பெற்ற படுகொலை அனைத்திலும் முஸ்லிம் ஊர்காவற்படையினர் இருந்திருக்கின்றார்கள். இதில் அரசாங்கம் வெற்றி பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் இருந்து வடமாகாணம் வரை முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் ஒரு குரோத மனப்பான்மை ஏற்படக் கூடாது என்பதற்காகத் தான் விடுதலைப் புலிகள் முஸ்லிம் மக்களை வடக்கிலிருந்து வெளியேற்றினார்களே தவிர திட்டமிட்டு இன சுத்திகரிப்பு செய்யவில்லை.

26 வருடங்களுக்கு பிற்பட்ட காலத்திலும் கூட பல படுகொலைச் சம்பவங்களை நினைவுகூருகின்ற போது, கடந்த அரசாங்கத்தில் இந்த நினைவு தினத்தை அனுஸ்டிக்கக்கூடாது என்று நீதிமன்ற ஆணையைப் பிறப்பித்துக் கொண்டு தடுத்த வரலாறுகளும் உண்டு.

நல்லாட்சி அரசாங்கத்தில் பல போராட்டங்களை செய்யக்கூடியதாக உள்ளது. படுகொலை தினங்களை அனுஸ்டிக்கக்கூடியதாக உள்ளது. இவ்வாறான படுகொலை சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றிருக்கின்றது என்பதை எமது சந்ததியினருக்கு எடுத்துக் காட்டும் முகமாகவே நினைவு தினங்களை அனுஸ்டிக்கின்றோம்.

இதன்மூலம் தான் இன்னுமொரு படுகொலை சம்பவங்கள் இந்த மண்ணில் இடம்பெறாமல் இருப்பதற்கு காரணமாக உள்ளது என்றார்.

37 comments:

  1. தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் உள்ள மனக்கசப்புகளை இல்லாமல்செய்ய நீங்கள் முயட்சிப்பது போல் தெரிகிறது ,ஆனால் நீங்கள் சொல்வது உண்மையாயின் எங்களை விரட்டும்போது குறைந்தபட்சம் எங்கள் பணத்தையும் நகைகளையுமாவது எடுத்துச்செல்ல விட்டிருக்கலாமே. வெறுங்கையோடு பிச்சைக்காரர்களாக அல்லவா விரட்டப்பட்டோம். பிச்சைக்காரர்கள் போல் வாழ்ந்தோம் என்ற மனக்கசப்பு எங்களை விட்டுப்போவது அல்லது எங்கள் மனதில் இருந்து அதை போக்குவது என்பது கொஞ்சம் கஷ்டமான விடயம் திரு அரியேந்திரன் அவர்களே

    ReplyDelete
  2. பா.அரியநேத்திரன் என்ற எருமை இதே கருத்தை முன்னரும் பல தடவைகள் சொல்லியுள்ளது.

    "வடபகுதியில் இருந்த முஸ்லிம் மக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் உயிராபத்து இன்றி பாதுகாப்பாக வெளி யேற்றினார்களே தவிர, திட்டமிட்டு இன சுத்திகரிப்பு செய்யவில்லை" என்று நாக்கூசாமல் உன்னைப்போன்ற போன்ற நயவஞ்சக போய்களால் தான் இவ்வாறு கூற முடியும். உனக்கு “இன சுத்திகரிப்பு” என்பதன் கருத்து தெரியவில்லை போலும்.
    அயோக்கியத்தனம் செய்யும் உனக்கு ஆங்கிலம் தெரியும் என்று நினைக்கின்றேன். எனவே அதன் வரை விலக்கணம் [[ Ethnic cleansing ]] is the systematic forced removal of ethnic or religious groups from a given territory by a more powerful ethnic group. மிகவும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

    நான் கேட்கிறேன் "வடபகுதியில் இருந்த முஸ்லிம் மக்களின் (அனைத்து உடைமைகளையும்) தமிழீழ விடுதலைப் புலிகள் (கொள்ளையடித்த பின்னர்), உயிராபத்து இன்றி (வெறுங்கையுடன்)பாதுகாப்பாக வெளி யேற்றினார்களே தவிர, திட்டமிட்டு இன சுத்திகரிப்பு செய்யவில்லை" என்பது தானே உண்மை. ஏன் உன்னால் அந்த உண்மையை கூற முடியவில்லை?

    கூறு கெட்டவனே, உன்னால் அல்ல, உன்னைப்போன்ற எந்த நயவஞ்சகத் தமிழனாலும் கூற முடியாது. காரணம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து தமிழர்களும் முஸ்லிம் மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்தது உண்மை தானே. இதில் அடுத்தவர்கள் மேல் நீ பழி போட்டு விட்டுத் தப்பிக்க நினைக்காதே.

    ஒரு தரப்பினருக்கு கசக்கிறது என்பதற்காக, அவர் கண்ட உண்மையை பொய் என்று சொல்லி விட முடியாது. அல்லது ஒரு தரப்பினருக்கு ஆறுதல் அளிக்கிறது என்பதற்காக எந்த ஒரு தகவலையும் அவர் மிகைப் படுத்தியும் கூறிவிட முடியாது. எது எப்படியோ அதை அப்படியே பதிவு செய்பவன்தான் உண்மையானவன், நேர்மையானவன். அது சரி உன்னைப்போன்ற கயவனிடம் இதனை எதிர்பார்க்க முடியாதுதான்.

    அனாலும் ”உண்மை பேசும் தமிழர்களும் இருக்கின்றனர் என்பதற்கு சான்றாக எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் கூறியதை குறிப்பிட்டே ஆகவேண்டும் [[ யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியமையானது சட்ட வரைவிலக்கணத்துக்கமைய, இனச் சுத்திகரிப்பே ஆகும் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பலவந்தமாக ஓர் இனத்தை ஒரு பிரதேசத்திலிருந்து வெளியேற்றியமையை, இனப் பாதுகாப்பு எனக் கூறுவது, அவர்களை மேலும் அவமானப்படுத்தும் செயலாகும் எனவும் குறிப்பிட்டார்.]]

    “வடபகுதியிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் மன்னிப்பு கோரப்பட்ட போதிலும் பலர் இன்று வரை இன சுத்திகரிப்பு என்ற வார்த்தைப் பிரயோகத்தை கூறி வருவதாக" என்று அரசியல் சாக்கடையில் காலந்தள்ளும் பா.அரியநேத்திரன் கூறினார். அது சரி இன சுத்திகரிப்பை “இன சுத்திகரிப்பு” என்று சொல்லாமல், உன்னைப்போல் “பாதுகாப்பானாக வெளியேற்றினார்கள் “ என்று ஒரே பொய்யை திரும்பத்திரும்ப சொல்லச் சொல்கின்றாயா? அது சரி எப்போது மன்னிப்பு கேட்டனர்? நீ கனவு காண்பதெல்லாம் நிஜம் என்று எண்ணி விடாதே.
    ஒருவனை அவனது வீட்டிலிருந்து வெறுங்கையுடன் அடாவடியாய் வெளியேற்றி, வீட்டின் அத்திவாரக் கல் உட்பட கொள்ளையடித்து முடித்து விட்டு. ஹி ஹி தவறு நடந்து விட்டது மன்னித்துக்கொள்ளுங்கள் என்று கேட்பாராம்? தூ வெட்கம் கொட்டவனே. போகட்டும் பாசிசப்புலிகளின் எப்போது மன்னிப்பு கேட்டனர்? அதை மட்டுமாவது சொல்?

    இதை விடுத்து “ மூதூரில்” “கிழக்கு மாகாணத்தில்” என்று உனது உளுத்துப்போன பல்லவியைத் தொடங்காதே. கிழக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தது எல்லாமே தற்காப்புக்கானது அதுவும் கூட [[குட்டக் குட்ட குனிபவன் மடையன் அல்ல]] என்பதை நிருபிக்க வேண்டிய நிற்பநத்தத்தை நீங்களே உருவாக்கினீர்கள்.

    ஆம்... துப்பாக்கி நீங்கள் சுட்டால் மட்டும்தான் சுடுமா? அல்லது வெட்டருவாள் நீங்கள் வெட்டினால் மட்டும்தான் வெட்டுமா? ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்ட நாங்கள் என்ன ஈசனின் பிள்ளைகளா? நாங்கள் இஸ்லாமியர்கள் எங்களை நாங்கள் காத்துக்கொள்ள காத்திரமான நடவடிக்கைகளை எடுத்தோம் அதற்கு வழிகோலியது நீங்கள் தான் .

    இந்தியப் சுதந்திரப்போர் முஸ்லிம்களையும் அரவணைத்துக் கொண்டு போராடியதால் வெற்றி கண்டது, ஈழ சுதந்திரப்போர் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்து போராடியதால் தோல்வியில் முடிந்தது.
    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. "மூதூரில்” “கிழக்கு மாகாணத்தில்” என்று உனது உளுத்துப்போன பல்லவியைத் தொடங்காதே. கிழக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தது"
      சூப்பர் அப்பு
      எப்புடீ எப்புடீ உங்களுக்கு வந்தா ரெத்தம்.?எங்களுக்கு வந்த தக்காளீ சொஸ்ஸா!!

      Delete
    2. யார் வெட்டினாலும் வீச்சருவா வெட்டும்.யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும்.
      ஆனால் என்ன நநொக்கத்துக்க அத செய்யுரம் என்பதில் தான் உண்மை இருக்கிறது.
      நாங்க கொள்கைகாக ஆயுதம்எடுத்தம். நீ சிங்களவன்ட கைகூலீ யாக ஆயுதம்எடுத்தாய்..
      கைகூலீக்கும் போராளிக்கும் வித்தியாசம் இருக்கு.

      Delete
    3. கல்முனை வீரமுனை சத்துருகொண்டான் பொத்துவில் மூதூர் என எங்களை இனப்படுகொலை செய்தீர்கள்அம்பாறையில் 12கிராம்.,மட்டுவில்3கிராமம் இனசுத்திகரிப்பு செய்யப்பட்டு மூஸ்லீம் கிராமம் ஆக்கினீர்கள் இவற்றை செய்துவிட்டு முஸ்லீம்களின் பாதுகாப்புக்கென்றீர்கள்.
      புலீகள் உங்கள்பாதுகாப்புக்கு இனசுத்தீகரிப்பு செய்தனர்.கூட்டிகளித்து பாரும் கணக்கு சரியாய் வரும்.
      இழைத்தவன் ஏமாளியாம் ஹி..ஹி

      Delete
  3. <<<<<<
    ஆரம்பக்காலத்தில் போராடட்ட குழுக்களில் கணிசமான முஸ்லிம்களும் இருந்தது உண்மைதான். ஆனால் இலங்கை இராணுவத்திற்கு எதிரான தாக்குதல்கள் நடக்கும் போது, களத்தில் முன் வரிசைப் படையணியில் முஸ்லிம் போராளிகளை நிறுத்தி அவர்களை திட்டமிட்டு அழிக்கத் தொடங்கிய போது விழித்துக் கொண்ட முஸ்லிம் போராளிகள், போராட்டக் குழுவிலிருந்து வெளியேறினர் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?

    எனவே பா.அரியநேத்திரா, நீ ஒன்றும் எமக்கு புதுக்கதை சொல்லவேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ஹஹீ..ஹீ,
      முஸ்லீம்கள் ஆயுதக்குழுக்களில் இணைந்ததற்கு காரணமே தமிழரை உழவுபார்த்து காட்டி கொடுத்து பணம்சம்பாதிக்கவே!!
      தமிழர் இதை அறிந்ததும் அடிக்கு பயந்து ஓடினர்.வரலாற்றை மறைக்கதே,
      அது போக முன்னுக்கு போபவன் மட்டும் சாக நடந்தது கத்தி சண்டையா..ஹீ..ஹீ
      அப்படி யென்றால் முஸ்லீம்கள் வெளியெறிய வுடன் தமிழர் பொராட்டம் வீழ்திருக்கவேண்டுமெ!!
      மமுஸ்லீம்கள் வெளியெறியபிறகெ தமிழர் பபோரட்டம் வளர்ந்தது.
      இப்போது திடீரென தமிழர்போரட்டதில் பங்குகோர காரணம்என்ன?
      தீர்வுதிட்டத்தில் பங்கு கோரத்தானே!!

      Delete
  4. அரியநேத்திரன் அவர்களே, புலிகள் முஸ்லிம்களை இன சுத்திகரிப்புத்தான் செய்தார்கள். நீங்கள் இவ்வளவு மட்டமான, பொய்யான, உண்மைக்கு மாற்றமான விளக்கும் கொடுப்பீர்கள் என நாம் எதிர்பார்க்கவில்லை. கிழக்கில் தமிழ் ஆயுத குழுக்களால் முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள், அவர்களது சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன, அப்பாவி வர்தகர்களையும், பொதுமக்களையும் கடத்தினார்கள், கட்பம் கேட்டார்கள், பணம் வசூலித்தார்கள், தங்களது ஆயுதத்தின் மூலம் முஸ்லிம்களை அடக்கி ஆளவும், அவர்களது பொருளாதாரத்துக்கும் அன்றாட வாழ்க்கைக்கும் அச்சுரத்தலாக இருந்தார்கள். இவற்றினால் ஏட்பட்ட முரண்பாடுகளே கிழக்கில் தமிழ் முஸ்லீம் மக்கள்களுக்கு இடையில் பிரச்சினை ஏட்பட்டது. நீங்கள் சும்மா கதை அளக்காதீர்கள். உங்கள் இந்த பேச்சும் பிழையான விளக்கமும், மேலும் நீங்கள் முஸ்லிம்களை அவநம்பிக்கைக்கே இட்டு செல்கிறீர்கள். மன்னிப்பு கேட்டது அவர்களது பெரும் தன்மையையும் நேர்மையையும் காட்டுகிறது. ஆனால் நீங்கள் எதிர்கால சந்ததிக்கு பிழையான செய்தியை சொல்லுகிறீர்கள். " கேட்பவன் கேனப்பயல் என்றால் எருமை மாடும் ஏறப்பிலேன் ஓட்டும் என்பானாம்"

    ReplyDelete
  5. mr areenthiran avargalea naan ennum uyirotothan erukkinren..... thad time i am 4/year baby ennida eruntha engaal soththu enral enaathu kaathil eruntha kadukkan athaavathu oru minni maddumthan athaiyum gooda pariththu vidduththan anuppinaargal unp goverment enathu kadukkanaiyuma?parikka sonnargal ???naangal edda safamthn enru neengal anupavikkummudivugall goad is the gerad alkamthulillah.....

    ReplyDelete
  6. வட முஸ்லீம்களின் அவலத்துக்கு அஷ்ரப்பே காரணம்.

    ReplyDelete
    Replies
    1. ya since he didn't say to hang weapons like ltte

      Delete
    2. Ha..goodjoke Bro.
      During r.premadasa petiod and jr petiod ashrf get wepons and beging musilm jigad.

      Delete
    3. ஆமாம் .... பிரபாகரன் கொலைக்குக் காரணம் ஹிட்லர் தான்

      Delete
  7. Please do not try to distort the the well known truth.You committed every possible massacres against muslims ran down their economy,raped muslim women,abducted selected persons,took their jewels, small girls' and babies' ear rings and bangles removed and evicted from their places of origin.After all you speak like protective wings to wipe put the stigma and to regain the parliamentary lost seat.

    If the case is as you claim, then why did you rob money and jewels.Why did you cordone off private parts of women to check money and jewels.Why did you en croach their lands and you are still blocking their resettlement.People of your calibre are the curse for communal harmoney. Please expect that we are going to vote for merger of the north and east.

    ReplyDelete
  8. Good intention. Rs500 each and within 2 hours leaving all the belongings had to go without direction,without place?. yes good work.Having done the most barbaric work now you all you wanted be good people.

    ReplyDelete
  9. Mulup Poosanikkaayai Oru Kavalam Soththukkul Mooda Ninaikkum Moodan! Ridiculous statement.

    ReplyDelete
  10. எனது வீடு தொடக்கம் டொய்லட் பேசின்வரை கழட்டியது,பாதுகாக்கவா ?.....இது இனச்சுத்தீகரிப்புத்தான்.சனாதி ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும்

    ReplyDelete
  11. அவருக்கு ஆங்கிலம் புரியுமோ தெரியாது.

    ReplyDelete
  12. Ariyanentiran MP netru pirandawar onnum puriyama solli irukkaru .

    ReplyDelete
  13. நல்ல கதை நெடுப்பம் போதாது, அரியநேத்திரன் ஐயா! உங்களிடம் ஒரு சிம்பிலான கேள்வி பின்வரும் சம்மவம் உண்மையா இல்லையா?
    1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பன்னிரண்டாம் திகதி ஏறாவூர் பிச்சிநகர் என்ற முஸ்லீம் கிராமத்துக்குள் புகுந்த புலிப்பயங்கரவாதிகள் 118 முஸ்லீம்களை சுட்டும்வெட்டியும் கொன்றனர். இருபதுபேர் காயமுற்றனர். ஏறாவூர் மட்டக்கள்ப்பிலிருந்து ஒன்பது மைல்கள் அப்பால் உள்ளது. மட்டகளப்பு – பொலநறுவை வீதியில் அமைந்துள்ள இந்த கிராமத்துக்குள் துப்பாக்கிகள் கத்திகள் கோடரிகள் வாள்கள் சகிதம் சென்ற புலிப்பயங்கரவாதிகள் நடத்திய ஈனத்தனமான இனச்சுத்திகரிப்பில் 45 ஆண்கள் 28பெண்கள் 31 பிள்ளைகள் பலி எடுக்கப்பட்டார்கள். இதில் பல சிசுகள் ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள் இதில் மிக வேதனைக்குறிய விடையம் முஸ்லிம் இளம் கற்பிணி தாயை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெழியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் புலி பயங்கரவாதிகள் இது ரஞ்சித் அப்பாவின் தலைமையில் காத்தான்குடியில் நடந்தது, இங்கு பெண்களும் சிறுவர்களும் அணிந்திருந்த நகைகள் கொள்ளையிடப்பட்டன.

    ReplyDelete
  14. ஐயா! புலிகளின் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலுக்கு முன்னரேயே அரசியல் ரீதியான தாக்கம் ஒன்றைத் தமிழ்ச்சமூகம் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திவிட்டது!
    இலங்கை அரசியல் எனும் போது அதில் முஸ்லிம்களின் பங்கு மிகையானது. பிரித்தானிய காலனித்திலிருந்து விடுபட்ட இலங்கைக்கு பொருளாதார ரீதியாகவும், வெளியுறவு கொள்கையினை சுமந்து சென்று வெளியுறவு அமைச்சுக்களை அலங்கரிந்த முஸ்லிம்கள் வரலாறு நெடுகிலும் நாபகப்படுத்தப்பட வேண்டியர்களே. இன்றுவரை அரேபிய உறவுகளை ஏற்படுத்தி அதனூடாக இலங்கைக்கு பல வகையிலும் நன்மை பயக்கச் செய்தவர்கள், செய்து கொண்டிருப்பவர்கள் முஸ்லிம்கள்தான். அத்துடன் தமிழ் முஸ்லிம் உறவுகளை ஏற்படுத்த பாடுபட்ட முஸ்லிம் பெரியவர்கள் பலரின் பங்கு, வரலாற்றுச் சான்றுகள் தழிழ் சமூகத்திடம் தொடர்ச்சியாக மறைத்து, மறக்கடிக்கப்பட்டே வந்துள்ளது.
    இன்றுள்ள அரசியலில் பேதங்கள் அதிகரித்து முஸ்லிம் அரசியல் மட்டுமல்ல முழுச்சமூகமுமே சந்தேகத்தோடு சக சகோதர்களைப் பார்க்கின்ற நிலைமை எற்படுத்தியவர்கள் இன்றுள்ள தழிழ்த்தலைமைகள், புலிகளின் பலாத்காரத்தினால் மட்டுமல்ல தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டினாலும்தான். மிதவாதத் தமிழ்த்தலைமை அழிக்கப்பட்ட பின்னர், புலிகளின் கைப்பாவையாகி இருந்த இந்தத் தமிழ் அரசியல் தலைமை முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டிக்கக்கூட உரிமையற்று வக்கற்ற அடிமைகளாக இருந்தவர்கதான் இன்று வடகிழக்கை இணைக்கக் கோறுகின்றனர்..
    அம்பாறை போன்ற பிரதேசங்கள், பாரம்பரிய தமிழர் தாயகம் என்று கூறிவந்த இந்தத் தமிழ்த்தலைமையினர் தெளிவான அரசியல் தீர்வொன்றை முஸ்லிம் சமூகத்தினருக்கு எடுத்தியம்பத் தவறிவிட்டனர்.
    புலிகளின் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலுக்கு முன்னரேயே அரசியல் ரீதியான தாக்கம் ஒன்றைத் தமிழ்ச்சமூகம் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திவிட்டது. ஏனெனில் தமிழர்களுக்குரிய தீர்வே முஸ்லிம்களுக்கும் பொருந்தும் என்ற தொனியில் தொடர்ந்து பேசிய வந்த இந்தத் தமிழ்த்தலைமை முஸ்லிம் சமூகம், அவர்களின் அடையாளம் என்பன தனித்துவமானது என்பதை ஏற்க மறுத்தும் வந்துள்ளது.
    முஸ்லிம்களின் தனித்துவம் பற்றி இதுவரை அரசு நிலைப்பாடு எதுவும் எடுக்காதது ஒருபுறமிருக்க, அவர்களை மீளக் குடியமர்த்துவதற்குரிய சூழலை அரசியல் ரீதியாக ஏற்படுத்த தமிழர் தலைமை இதுவரை எந்த முயற்சியும் எடுக்க வில்லை. அத்துடன் முஸ்லிம்கள் எடுத்த பல முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாகவே இருந்து வந்துள்ளனர்.
    புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம் என்று கூறிய போதெல்லாம் முஸ்லிம்கள் அற்ற தமிழீழம்தான் என்று மறைமுகமாகக் கூறப்பட்டதை நாம் ஒரு போதும் மறக்க மாட்டோம், மறக்கவும் கூடாது.
    இராணுவம் யுத்த நிறுத்தத்திற்கு முன்னர் இருந்த நிலைகளுக்குத் திரும்பவேண்டும் என்று கோரிய தமிழ் அரசியல் தலைமை, ஏன் புலிகளிடம் முஸ்லிம்கள் முன்னர் இருந்த இடங்களுக்குத் திரும்ப எந்தப் பேச்சுவார்த்தையுமே தொடங்கக் கூட தயக்கம் காட்டினர்!?
    முஸ்லிம்கள் இடம்பெயர்ந்த இடங்கள் என்றுமே மீளக்குடியமரக்கூடியதாக இருந்ததும், இடம்பெயர்ந்த மக்கள் குறிப்பாக புத்தளம் பகுதிகளில் குடியேறிய முஸ்லிம்கள் எப்போதாவது மீளச்செல்வோமா என்ற கனவுடனும் ஏக்கத்தோடுமே தொடர்ந்து வாழ்ந்து வந்தனர். இறுதியில் அவர்கள் சென்ற போது என்ன நடந்தன என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.
    நடந்தவற்றிற்கு மன்னிப்பு மட்டுமல்ல அவர்களிடமிருந்து சூறையாடப்பட்ட சொத்துக்கள் மீளக் கையளிக்கப்பட எதுவித நடடிக்கையும் எடுக்காததோடு, அவர்கள் சுயாதீனமாக இயங்க முழுமையான அடக்குமுறையற்ற மனப்பான்மை தமிழர்களிடம் மீண்டும் ஏற்படுத்த இந்தத் தமிழ் தலைமைகள் முயற்சிக்க வில்லை மறாக ரங்கா போன்ற சூழ்ச்சிக் காரர்களைக் கூட இவர்கள் கண்டிக்க வில்லை என்பதும் கசப்பான உண்மை.
    எவ்வாறு தமிழர்கள் தமது அரசியல் தீர்வை முடிவு செய்ய விரும்புகின்றார்களோ அவ்வாறே முஸ்லிம்களும் தமது அரசியல் தீர்வை முடிவு செய்ய வேண்டும் அதைவிடுத்து, அரசியல் நெளிவு சுழிவுகளில் சாதாரண மக்களை மூட்டிவிட்டு அதில் குளிர் காய்வதை அரசியல் தலைமைகள் இனியாவது நிறுத்திக் கொள்ளட்டும்!
    தற்போது சிங்களவர்கள் அவர்கள் செய்த பிழைகளை எண்ணிப்பார்க்கத் துவங்கி விட்டனர், ஆனால் இன்னும் தமிழ் பேசிக்கொண்டு இருக்கும் நாம் எமது பிரச்சினைகளை எமக்குள் தீர்த்துக் கொள்ள பொறிமுறை ஒன்றை அடயாளப்படுத்த முடியாதபோது எப்படி தீர்வு வரும்.!?
    முன்கை நீண்டால் முழங்கை நீளும்!!

    ReplyDelete
    Replies
    1. கூறு கெட்டவங்கள் சொன்னாலும் சொல்லுவார்கள் ... இதையெல்லாம் செய்தது ரொபர்ட் முகாபே என்று

      Delete
  15. but prabaharan accepted that as a "thunbiyal sambawam" in press meet

    ReplyDelete
  16. இவன் போன்ற நயவஞ்சகர்கள், கயவர்கள் தமிழ் சமுதாயத்தில் இருக்கும் வரை முஸ்லிம்கள் வடகிழக்கு இனைப்பை நினைத்தும் பார்கக்கூடாது. இவ்வளவு பெரிய பொய்யை நாவு கூசாமல் கூறுகிறான்.

    ReplyDelete
  17. 1990களில் கிழக்கில் முஸ்ஸிம் ஊர்க்காவள் படையினரும், ஜிகாத் பயங்கரவாதிகளும் தமிழர்களை கொலை செய்தல், LTTE யை காட்டி கொடுத்தல் ஆகியவற்றை செய்ததால் தான் LTTE அவர்களை கொன்றதாக அறிந்தேன்.
    இதன் வெளிப்பாடு தான் வட முஸ்ஸிம்களின்
    வெளியேற்றமும். முஸ்ஸிம்கள் காட்டிகொடுப்புகளில் ஈடுபட்டதும் காரணமாக இருக்கலாம்.
    ஆணால், எல்லாம் கொடூர யுத்தத்தின் விளைவுகள்.
    1990யில் சிறுவனாக நானும் பெற்றோருடன் கிளாலி பாதையுடாக நடந்து கடந்தது பின்னர் கொழும்பை வந்தடைந்தேன்.
    இப்படி கொடூர யுத்தினால் வட-கிழக்கு மக்கள் எல்லாரும் பாதிக்கபட்டார்கள். தமிழர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா 1985 மற்றும் 1987 சம்பவங்களுக்கு என்ன காரணம் ஐயா தரப்போகிறீர்கள்.

      Delete
  18. Tamil are effected because of they are greedy..
    They want to get more land .
    They want to eat all cake
    They do not share their food
    They have cast system
    They take and give interest
    They drink alcohol
    Now no more Eelam
    Now jaffna is drug land
    Soon jaffna will drug hub
    Girls and boys drink druGSM
    It is not our fault but divine punishment
    Your karma
    You done bad and bad comes to you .

    This is the world
    Do not think bad of any one

    ReplyDelete
    Replies
    1. Don't be jealous baby

      Delete
    2. *yes we want get more land because it is our homeland(my grand fathers ruled this land)
      *yes we want to eat all cakes because we are hungry for 60years.
      *Yrs we wont share our food because we sacrifice lot of things for our food.

      Delete
  19. Neengal ettapper paramparail irrunthu vanthavarhal thane.ungal porattathai kattikoduthavar yar.maththaiya muthal K P varai.prapaharanin pistol eduthu saavai confirm paniyathu soniyada.loosangala.

    ReplyDelete
  20. முஸ்லிம்களை பலவந்தமாக வெளியேற்றியது இனச்சுத்திகரிப்பே. அந்தப்பாவத்திலிருந்து உங்கள் சமூகத்தைச் சுத்திகரிப்பதத்திற்கான பரிகாரம் பாதிக்கப்பட்டவர்களை மீளக்குடியேற நீங்கள் அனுசரணையாளர்களாகச் செயல்படுவதே.

    ReplyDelete
  21. பாசிசப் புலிகளுக்காகப் பரிந்துரைப்போரும் பல்லில்லாப் புலிகள் போன்றோரே.

    ReplyDelete
  22. பதில் கொடுக்காமல் புறக்கணிப்பதே முட்டாள்களுக்கான பதிலாக அமையும். அன்றியும் இவர்களுக்கு பதில் கொடுக்க இந்தக் கழிசடைகள் யார்? இந்த தற்குறிகளால் ஆகப் போவது என்ன? ஆக்கங்களுக்கு பினூட்டத்தை பதிவிடுங்கள், ஆட்களுக்கு அல்ல.

    ReplyDelete
  23. என்னருமை முஸ்லிம் இந்து சகோதரர்களே விவாதியுங்கள்.... நன்று... உண்மை வெளிப்படும் வரை விவாதிப்போம்.
    ஆனால் நல்ல வார்த்தைகளைக் கொண்டு நளினமாக....
    முஸ்லிம் சகோதரனே உன் வார்த்தை, பேச்சு, செயல்கள் எல்லாம் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
    உண்மை உரத்து சொல்லப் பட வேண்டியது தான், இஸ்லாம் சிறந்தது என்ற உண்மையும் சேர்த்து....
    எமது பிரப்பின் நோக்கங்களில் ஒன்றே இஸ்லாத்தை வாழ்ந்து காட்டி சான்று பகர்வதே....

    ReplyDelete
  24. Empty bottle says i won't give you watter..haha

    ReplyDelete

Powered by Blogger.