Header Ads



முஸ்லிம் அரசியல் தலைவர்களின் தாமதம் - சமூகத்தின் பிரதிநிதித்துவத்திற்கு பாதிப்பு

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான எல்லை நிர்­ண­யங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் முறை­யற்ற எல்லை நிர்­ண­யங்­களை மீள் நிர்­ணயம் செய்­யு­மாறும் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் எல்லை நிர்­ணய முறை­ப்பாட்டு விசா­ர­ணைக்­கு­ழுவின் தலை­வ­ரிடம் வேண்­டுகோள் விடுத்தும் அது பய­னற்றுப் போயுள்­ளது. 

மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வினால் நிய­மிக்­கப்­பட்ட எல்லை நிர்­ணய முறைப்­பாட்டு விசா­ர­ணைக்­குழு விசா­ர­ணை­களைப் பூர்த்தி செய்து எல்­லை­களை மீள்­நிர்­ணயம் செய்து பட­ வ­ரை­பு­க­ளுக்­காக எல்லை நிர்­ண­யங்­களை நில அளவைத் திணைக்­க­ளத்­துக்கு சமர்­பித்துவிட்­ட­மையே இதற்குக் கார­ண­மாகும். 

சுமார் 200 க்கும் மேற்­பட்ட முறை­ப்பா­டு­களை விசா­ரித்து உள்­ளூ­ராட்சி மன்ற வட்­டார எல்­லை­களை மீள் நிர்­ணயம் செய்து பட­வ­ரை­பு­க­ளுக்­காக நில அளவைத் திணைக்­க­ளத்­திடம் சமர்ப்­பித்­தி­ருப்­ப­தாக எல்லை நிர்­ணய விசா­ர­ணைக்­கு­ழுவின் தலைவர் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார். 

எல்லை மீள்­நிர்­ண­யங்கள் தொடர்­பான பூரண அறிக்கை எதிர்­வரும் அக்­டோபர் மாத நடுப்­ப­கு­தியில் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்­ச­ரிடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் எல்­லை­களின் விப­ரங்கள் அக்­டோபர் மாதம் இறு­தியில் அர­சாங்க வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­ப­டு­மெ­னவும் அவர் தெரி­வித்தார். 

கடந்த 31 ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் நீர்­வ­ழங்கல் வடி­கா­ல­மைப்பு மற்றும் நகர திட்­ட­மிடல் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் எல்லை நிர்­ணய முறைப்­பாட்டு விசா­ர­ணைக்­கு­ழுவின் தலைவர் அசோக பீரிஸைச் சந்­தித்து முறை­யற்ற எல்லை நிர்­ண­யங்­களால் முஸ்­லிம்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவ்­வா­றான எல்­லைகள் திருத்­தப்­பட வேண்டும் என கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.

ஆனால் அக்­கோ­ரிக்­கைகள் முன்­வைக்­கப்­ப­டு­வ­தற்கு முன்பே குறிப்­பிட்ட எல்லை நிர்­ண­யங்கள் நில அளவைத் திணைக்­க­ளத்­திடம் பட ­வ­ரை­பு­க­ளுக்­காக கைய­ளிக்­கப்­பட்­டு­விட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

நிலத்­தொ­டர்பு, சனத்­தொகை, இன­ வி­கி­தா­சாரம் என்­பன கவ­னத்­திற்கு கொள்­ளப்­ப­டாது ஒரு சமூ­கத்தின் நலன் கருதி உள்­ளூ­ராட்சி மன்ற வட்­டார எல்­லைகள் வகுக்­கப்­பட்­டுள்­ளதால் முஸ்­லிம்கள் தமது பிர­தி­நி­தித்­து­வத்தைப் பெற்றுக் கொள்­வதில் தடைகள் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் அமைச்சர் ஹக்கீம் எல்லை நிர்­ணய குழுவின் தலைவர் அசோக பீரி­ஸிடம் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். 

திரு­கோ­ண­மலை, கம்­பஹா, புத்­தளம் மற்றும் கண்டி மாவட்­டங்­களில் மேற்­கொள்ள எல்லை நிர்­ண­யங்கள் மூலம் முஸ்லிம் சமூ­கத்­துக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் ஹக்கீம் தெளி­வுப்­ப­டுத்­தினார். புத்­தளம் மாவட்­டத்தில் புத்­தளம் நக­ர­சபை, புத்­தளம் பிர­தேச சபை, கற்­பிட்டி பிர­தேச சபை, ஆராய்ச்­சிக்­கட்டு பிர­தேச சபை, வண்­ணாத்­தி­வில்லு பிர­தேச சபை, சிலாபம் நக­ர­சபை, சிலாபம் பிர­தேச சபை, நாத்­தாண்­டியா பிர­தேச சபை என்­ப­வற்­றி­னாலும் கண்டி மாவட்­டத்தில் அக்­கு­றணை பிர­தேச சபை, பாத்­தா­ஹே­வா­ஹட்டை பிர­தேச சபை, பாத்­த­தும்­பறை பிர­தேச சபை என்­ப­வற்­றி­னாலும் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் மூதூர், கந்­தளாய் பிர­தேச சபை­க­ளி­னதும் எல்லை நிர்­ண­யங்­களில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இவற்றின் எல்­லைகள் மீள் நிர்­ணயம் செய்­யப்­பட வேண்­டு­மெ­னவும் அமைச்சர் அசோக பீரி­ஸிடம் கோரிக்கை விடுத்­தி­ருந்தார். 

அக்­கு­றணை பிர­தேச சபையின் வட்­டார எல்லை நிர்­ண­யத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்தார். அக்­கு­றணை பிர­தேச சபைக்கு 11 முஸ்லிம் உறுப்­பி­னர்­களை பெற்றுக் கொள்ளும் வகையில் வட்­டார எல்­லைகள் வகுக்­கப்­ப­டு­மென உறுதி வழங்­கப்­பட்­டி­ருந்­தாலும் தற்­போது 9 முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வமும் 9 சிங்­கள பிர­தி­நி­தித்­து­வமும் பெற்றுக் கொள்ளும் வகை­யிலே வட்­டார எல்­லைகள் வகுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அமைச்சர் ஹக்கீம் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். 

அமைச்சர் ஹக்கீம் உட்பட முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முன்வைத்த முறைபாடுகளுக்கு முன்பே வட்டார எல்லைகள் வகுக்கப்பட்டு மீள் நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

முஸ்லிம் அரசியல் தலைவர்களின் தாமதத்தினால் சமூகத்தின் பிரதிநிதித்துவத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற வட்டார எல்லை நிர்ணயங்களின்படியே உள்ளூராட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.

விடிவெள்ளி  ARA.Fareel

3 comments:

  1. அடே முட்டக்கூட்டங்களா நீங்கள் எல்லோரும் அது வரைக்கும் எங்கு செத்து தொலைந்தீங்க,இது பற்றி அடிக்கடி எவ்வளவு செய்திகள் வெளியாகிக்கொன்டருந்த்தே?????

    ReplyDelete
  2. " முஸ்லிம் தலைவர்கள்" ? இதுவே பிழையான ஒரு கருத்து , இவர்கள் சுயநலம் பிடித்த அரசியல்வாதிகளே தவிர முஸ்லிம் தலைவர்களல்ல.

    ReplyDelete
  3. Voice, sariyaka sonneerkal,engalaipponra thengai madayarkal irukkum varai avarkal appadithan irupparkal.

    ReplyDelete

Powered by Blogger.