Header Ads



சுதந்திரக் கட்சி, மாநாட்டில் இப்படியும் நடைபெற்றது..!


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65வது ஆண்டு மாநாடு நேற்று குருணாகலில் மாளிகாபிட்டிய மைதானத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் பங்கேற்க வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகை தொடர்பாக அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் வருகை குறித்து முதலாவதாக சிங்களத்தில் அறிவிப்பு செய்தவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என குறிப்பிட்டிருந்தார்.

எனினும் தமிழ் மொழியில் அறிவிப்பு செய்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச என தவறுதலாக கூறியுள்ளார். தவறினை உணர்ந்து கொண்ட அறிவிப்பாளர் தன்னை சுதாகரித்துக் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என மீண்டும் அறிவிப்பு செய்துள்ளார்.

மாநாட்டை புறக்கணிக்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மலேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

நாட்டில் இல்லாத முன்னாள் ஜனாதிபதி கட்சியின் மாநாட்டில் பங்கேற்றதாக, மஹிந்த தரப்பு உறுப்பினர்கள் மகிழ்ச்சி அடைந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.