Header Ads



ரஞ்சனின் திரைப்படம் காண்பிப்பதை, நிறுத்துமாறு கோரிக்கை

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நடித்து வெளியாகியுள்ள புதிய திரைப்படமான மாயா திரைப்படத்தை ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்படுவதை பிரதமர் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

கடந்த 27ம் திகதி பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தனது இல்லத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் இறுதியில் ஊடகவியலாளர் ஒருவரை திட்டி அச்சுறுத்தி, கமராவை தாக்கிய சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

நுகர்வோரான மக்கள் ஊடகங்கள் வாயிலாகவே தகவல்களை பெற்றுக்கொண்டனர்.தகவல்களை அறிந்து கொள்வது நுகர்வோரின் உரிமை. அந்த உரிமை மீற மக்கள் பிரதிநிதிகளுக்கு எந்த வகையிலும் உரிமையில்லை.

தனது கருத்தை வெளியிட ஊடகவியலாளர் ஒருவருக்கு இருக்கும் புனிதமான உரிமையை நாங்கள் மதிக்கும் அதேவேளை ஊடகவியலாளர்களுடன் எப்படி நடந்து கொள்ள தேவையான பயிற்சிகளை அரசியலவாதிகளுக்கு வழங்க வேண்டும் என்பதே எமது அமைப்பின் நிலைப்பாடாகும்.

ரஞ்சன் ராமநாயக்கவின் மாயா திரைப்படம் ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்படுவதை பிரதமர் உடனடியாக தலையிட்டு நிறுத்த வேண்டும்.
தான் எந்த வகையிலும் ஊழல் மோசடிகளில் ஈடுபடவில்லை என்று கூற ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உரிமை இருக்கின்றது. அதனை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது மக்களுக்குரிய உரிமை.

நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ரஞ்சன் ராமநாயக்கவின் ஆதரவாளர்கள் அல்ல என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் ஊடகங்களுக்கு எதிரில் வெறித்தனமாக நடந்து கொள்ளும் நாய்களை கட்டிப்போட வேண்டும் என்று நல்லாட்சியிடம் மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்பதை ஜனாதிபதி புரிந்து கொள்ள வேண்டும் எனவும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.