Header Ads



அடம்பிடிக்கும் அப்ரிடி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி மன்னனும், முன்னாள் அணித்தலைவருமான சாயித் அப்ரிடி, தனக்கு பேர்வல் விழா வைத்தால் மட்டுமே ஓய்வு பெறுவேன் என அடம்பிடித்து வருகிறார்.

36 வயதான அப்ரிடி, எதிர்வரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று டி-20 போட்டியில் தன்னை விளையாட அனுமதிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும், தலைமை தேர்வாளரும், முன்னாள் அணித்தலைவருமான இன்சமாம்-உல்-ஹக்குடன் இடம்பெற்ற கூட்டத்தின் போது தான் பேர்வல் விழாவுடன் ஓய்வு பெற விரும்புவதாக அப்ரிதி தெரிவித்திருந்தார்.

இதுவரை 98 டி-20 போட்டிகளில் பங்கேற்று 1405 ஓட்டங்கள் எடுத்துள்ள அப்ரிடி, மேற்கிந்திய தீவுக்கு எதிரான தொடரில் பங்கேற்றால், சர்வதேச டி-20 அரங்கில் 100 போட்டிகளில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமை பெறுவார்.

ஆனால், சமீபத்தில் வெளியான மேற்கிந்திய தீவுக்கு எதிரான பாகிஸ்தான் அணியில் அப்ரிடியின் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.