Header Ads



மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி, பழைய மாணவர் அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம்

மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பின் வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி (01-10-2016) சனிக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளதாக கல்லூரி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். ஸாதிக் இஸ்லாஹி தெரிவித்தார்.

கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எம்.யூ.எம். றம்ஸி நளீமி தலைமையில் காலை 9மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில், பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார். 

இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பின் வருடாந்த பொதுக் கூட்டத்தில், பழைய மாணவர் அமைப்புக்கான புதிய நிர்வாகக் குழு அங்கத்தவர்கள் தேர்வு, யாப்புத் திருத்த ஆலோசனைகள் முன்மொழிவு, கல்லூரியின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள், அபிவிருத்திப் பணிகளில் பழைய மாணவர்களின் பங்களிப்பு போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட இருப்பதாகவும், இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் பழைய மாணவர்கள் இந்நிகழ்வில் தவறாது கலந்துகொள்ளுமாரும் கல்லூரியின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். ஸாதிக் இஸ்லாஹி 076 701 501 3 வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.