'முஸ்லிம்கள் நினைத்த இடங்களில் மாடுகளை அறுக்காமல், இனமுறுகலை தவிர்க்க வேண்டும்'
விடிவெள்ளி ARA.Fareel
முஸ்லிம்களின் குர்பான் கடமைக்காக மாடுகள் அறுப்பதற்கு அனுமதி வழங்கும் போது நாட்டின் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தி இனங்களுக்ககிடையில் முரண்பாடுகள் ஏற்படுவதை தவிர்க்கும் படி சிங்கள ராவய அமைப்பு உள்ளூராட்சி ஆணையாளர்களிடமும் பிரதேச செயலாளர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.
அனைத்து மாநரசபை ,நகரசபை ஆணையாளர்களிடமும் பிரதேசசபைகளின் செயலாளர்களிடமும் இவ்வாறான கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளதாக சிங்கள ராவயவின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார். குர்பான் மாடுகள் அறுப்பது தொடர்பில் சிங்கள ராவயின தலைவர் கருத்து தெரிவிக்கையில்,
குர்பானுக்கான மாடுகள் அனுமதியளிக்கப்பட்டுள்ள மாடுகள் அறுக்கும் மடுவங்களிலேயே அறுக்கப்படவேண்டும்.
மேல் மாகாணத்தில் ராகமையில் உள்ள மாடுகள் அறுக்கும் மடுவத்தை மாத்திரமே பயன்படுத்த முடியும். முஸ்லிம்கள் அவர்களது குர்பான் கடமைக் காலத்தில் தாம் நினைத்த இடங்களிலெல்லாம் வீடுகளிலும் மற்றும் பொது இடங்களிலும் மாடுகள் அறுப்பதற்கு உள்ளூராட்சி அதிகாரிகள் அனுமதி வழங்கக்கூடாது.
அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டு அதன் காரணமாக இனங்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டால் அதற்கு மாநகரசபை மற்றும் நகரசபை ஆணையாளர்களும் பிரதேச செயலாளர்களுமே பொறுப்புக் கூறவேண்டும்.
முஸ்லிம்கள் ஏனைய இன மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நாட்டின் சட்டத்திற்கு அமைய தமது சமயக் கடமையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். இந்துக்கள் மாடுகளை தெய்வமாக வணங்குகிறார்கள்.பௌத்தர்களும் மிருக வதையை எதிர்ப்பதுடன் மாடுகள் அறுப்பதைத் தடை செய்யவேண்டும் என்கிறார்கள்.
எனவே சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் மாடுகள் அறுக்கும் விடயத்தில் சட்டத்தைக் கடுமையாக அமுல்படுத்தி இதன் மூலம் நாட்டில் இன முறுகல் ஏற்படாதவாறு ஆவன செய்ய வேண்டும்.
இது தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கும் சிங்கள ராவய அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது என்றார்.
மடுவங்களில்தான் மாடு அறுக்க வேண்டும் என்ற சட்டம் தனி நபர்கள் அறுப்பதற்காகவா அல்லது வியாபாரத்திற்காக மாடுகளை அறுப்பவர்களுக்காகவா உள்ளதா?
ReplyDeleteSaringo jaffnavil avarrukku mandail pottapothu engu irruntheerhal.
ReplyDeleteTransportation will cost more.
ReplyDeleteதேரா் சொல்வது மிகவும் சரியே ... முஸ்லிம்களாகிய நாம் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் . அரபு நாடுகளில் கூட குறிப்பிட மாடு அறுக்கும் மடுவங்களில் மாத்திரமே மிருகங்கள் அறுக்கப்படுகின்றன .
ReplyDeleteThis is a Buddhist majority country where nearly all
ReplyDeletemen urinate at any time anywhere convenient to them .
Muslims don't slaughter animals in Sinhala villages.
It is good for Muslims to slaughter their "Kurbani"
at a selected location in every village . But at the
same time it is better for the trouble making monks
to mind their business of going house to house for
their Pirith and Bana services . Leave the Muslims
alone to look after their business.
பௌத்தர்கள் மிருகவதையை எதிர்ககிறார்களாம்.
ReplyDeleteகோழி , மீன் , பன்றி இவைகள் உயிர் உயிரில்லையோ?
ஒரு வேளை மாடு பெரிய மிருகம் , கோழி சின்ன மிருகம் ஆகவே சின்ன மிருக்கத்தை கொல்லுவது பரவாயில்லை என்பார்களோ?
ஆனால் அவரின் வேண்டுகோள் நியாயமானதே.
ReplyDeleteஇங்கு "மாடு வெட்டல்" என்பது ஒரு ஆயுதமே.
ReplyDeleteமுஸ்ஸிம்களை கட்டுப்படுத்துவதற்கு அல்லது திருத்துவதற்கு "மாடு வெட்டல்" ஐ பிக்குகள் பயன்படுத்துகறார்கள். அவ்வளவும் தான். இதை நிறுத்தினால் என்னொன்றை எடுப்பார்கள்.
Basic பிரச்சனை என்னவென்று கண்டுபிடித்து நீங்கள் திருந்தவேண்டும்.
ஏன்னென்றால் 35 வருடங்களாக ஆயுதங்களாலும் அரசியலிலும் எதிராக இருக்கும் தமிழர்களை விட, ஆதரவாக இருந்து பிரிவினையை எதிர்க்கும் முஸ்ஸிம்களை தான் பிக்குகளுக்கு பிடிக்குதில்லை. So something wrong somewhere!, Find & solve it.
Muslimgal meen saapital meen vathayai edithrpom matu vaday ay aadaripom
ReplyDeleteMr.Ajan Attathoni unmaiyai kandu puddithuvittar mahlchchi.
ReplyDeleteAjan Anthonyraj,
ReplyDeleteOur investigations indicate that less and less Sinhalese
nowadays listen to these Monks leaving the Monks no
choice but turning to more easy attention-grabbing business
so that their next meal is guaranteed . Don't you worry
Anthonyraj , Muslims will deal with the situation .
பெரும்பாலும் முஸ்லிம்கள் செறிவாக உள்ள பகுதிகளில்தான் குர்பானிக்கான மாடுகள் அறுக்கப்படுகின்றன. ஒரு சமயத்தில் உள்ள விடயங்ள் பல போது இன்னொரு சமயத்திற்கு பிடித்தமில்லாமல் இருக்கலாம்.அதற்காக அடுத்த சமயத்திற்கு சிரமத்தை (முஸ்லிம்கள் சிறுபான்மையாக உள்ள பகுதிகளில் பல மைல்களுக்கு அப்பால் உள்ள மடுவத்தை தேடிச் சென்று கடமையை நிறைவேற்றச் சொல்வது) கொடுக்கக் கூடாது. சகிப்புத் தன்மையுடன் நடக்க வேண்டும். இப்படியாக பிடித்தமில்லாத விடயங்களையெல்லாம் பிரச்சினையாகப் பார்த்தால் நாட்டில் முறுகல் நிலைதான் வரும். ஒரு சில தேரர்கள் முஸ்லிம்களை எப்போதும் ஒரு அச்ச நிலைக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள் போன்றுதான் உள்ளது.எனினும் முஸ்லிம்கள் செறிவு குறைந்த பகுதிகளில் பக்கத்தில் பக்கத்தில் குர்பானிக்கான மாடறுப்பதைத் தவிர்த்து குறிப்பிட்ட சில இடங்களைத் தெரிவு செய்வது நல்லது.
ReplyDelete