Header Ads



சுவாதி கொலை சம்பவம் - ராம்குமார் தற்கொலை, சாவில் மர்மம் என்கிறார் தந்தை


சுவாதி கொலை வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார்.

இவர் இன்று -18- மின்கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறையிலிருந்த ராம்குமார் இன்று திடீரென மின்கம்பியை கடித்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்று இந்திய தரப்பு பொலிஸ் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

குறித்த செய்தி வெளிவந்து கொண்டிருக்கும் போதே ராம்குமார் உயிரிழந்துவிட்டார் என்றும் உடல் ராயப்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த ஜுன் மாதம் 24ஆம் திகதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து ஐ.டி பொறியியலாளர் சுவாதி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமாரை நீண்ட நாட்களுக்கு பின்னர் பொலிஸார் கைது செய்தனர்.

நெல்லையில் உள்ள அவரது வீட்டில் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில்தான் பொலிஸார் ராம்குமாரை கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

ராம்குமார் தந்தை பேட்டி: இந்த சம்பவம் தொடர்பாக ராம்குமாரின் தந்தை பரமசிவன் அளித்த பேட்டியில், தனது மகன் ராம்குமார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவர் இறந்து விட்டதாக கூறுகின்றனர். இவரது சாவில் மர்மம் உள்ளது. போலீசார் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



No comments

Powered by Blogger.