Header Ads



விக்னேஸ்வரனிற்கு எதிராக, ஞானசாரா களத்தில் குதிக்கிறார்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனிற்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டமானது நாளைய தினம் வவுனியாவில் இடம் பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் விக்னேஸ்வரனினால் ஏற்பாடு செய்திருந்த எழுக தமிழ் பேரணியின் போது முன்வைக்கப்பட்ட சில கருத்துக்களுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தெ ஞானசேர தேரர் தலைமையில் இடம் பெறவுள்ளது.

வடக்கில் சிங்கள சமூகத்தை பாதுகாப்பது குறித்து இதன் போது கவனம் செலுத்தப்படும் என பொதுபல சேனா தெரிவித்துள்ளது.

வடக்கில் சிங்கள குடும்பங்களை குடியமர்த்த கூடாது, என்றும் தமிழர்கள் வாழும் இடங்களில் புத்தர் சிலைகள் இருக்க கூடாது எனவும் தெரிவித்தமையினாலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விக்னேஸ்வரனுடைய அந்த கருத்துக்கள் அரசாங்கத்தையே விமர்சிப்பது போல் இருந்ததாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தெ ஞானசேர தேரர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

10 comments:

  1. இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தத்துக்கு இரு தரப்பும் ஆவன செய்து வருகின்றது,

    ReplyDelete
  2. Let's start from 1982 which was conclude in May 2009

    ReplyDelete
  3. Welcome to North மொட்ட சார்!

    ReplyDelete
  4. Hey Mr. Attathoni and kumar nilavan.if u can stop n shw ur strength ya

    ReplyDelete
  5. It's a good lesson to the tamilians who were much happy when the BBS racists against Muslims. Many tamilians were Happily mocked us when the BBS against Muslims. But Now, it's turned over them (tamilians). However, I pray for Allah to protect and give hidayath to such tamilians from the harm of BBS racists.
    And I request tamilians not to be happy or mocked when someone is in trouble.

    ReplyDelete
  6. விக்னேஸ்வரா!சறுகில் கிடந்த சாரபாம்பை போரபேக்கில் போட்ட கதையாகிவிட்டது உங்கட எழுக தமிழ் கோசம்,மீண்டும் வீனாக நாயை அடித்து அதன் பீயை துப்பரவு செய்ய தற்போது முயற்சிக்காதிர் நம்நாட்டில் பிடித்த தீயின் நெருப்புத்தனல் இன்னும் முற்றாக அனையவில்லை!

    ReplyDelete
  7. எல்லாம் பெரியவர்ட செட்டப் போலதான் தெரியுது..

    ReplyDelete
  8. இதுதான் பொல்லை கொடுத்து அடி வாங்குவது,உள்ளத்தையும் கெடுத்தானாம் கண்ணாரப்பயல்

    ReplyDelete
  9. ஞானசார விக்கி எதிர்ப்பதற்காக வேண்டி முஸ்லிம்கள் ஒரு போதும் இந்த மடச்சாமியை சப்போட்பண்ணக்கூடாது.

    ReplyDelete
  10. எவ்வளவு உயரத்திலிருந்து குதிக்கிறார்

    ReplyDelete

Powered by Blogger.