Header Ads



ஹஜ்ஜுக்கு அனுப்புவதாக கூறி, ஏமாற்றிய முகவர்கள் பற்றி முறையிடுங்கள்...!

 -விடிவெள்ளி ARA.Fareel-

இலங்­கைக்கு கிடைக்கும் மேல­திக  ஹஜ்  கோட்­டாவின் மூலம் ஹஜ் ஏற்­பா­டு­களைச் செய்­வ­தாக உறு­தி­ய­ளித்து மக்­க­ளி­ட­மி­ருந்து முற்­பணம் பெற்­றுக்­கொண்­டுள்ள ஹஜ்  முக­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மெ­னவும் அவ்­வாறு  பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தமது முறைப்­பா­டு­களை முஸ்லிம்  சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு அனுப்பி வைக்க வேண்­டு­மெ­னவும் அரச ஹஜ் குழு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. 

அரச ஹஜ் குழுவின் உறுப்­பினர் மெள­லவி எம்.எஸ்.எம்.தாஸிம் இவ்­வேண்­டு­கோளை முன்­வைத்­துள்ளார்.   அவர்  தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் கடமை தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கையில், இலங்­கை­யி­லி­ருந்து  இவ்­வ­ருடம் ஹஜ் பயணம் மேற்­கொண்ட யாத்­தி­ரி­கர்கள் அனை­வரும்  நல­மாக  இருக்­கின்­றனர்.  

அவர்கள் தங்­கி­யி­ருக்கும் இடங்­க­ளுக்கு தற்­போது ஹஜ் கட­மையில் ஈடு­பட்­டி­ருக்கும் அமைச்­சர்­க­ளான எம்.எச்.ஏ.ஹலீம், ஏ.எச்.எம்.பெளஸி ஆகியோர் நேரடி விஜ­யங்­களை மேற்­கொண்டு முக­வர்­களால் அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்கும் சேவைகள் பற்றி  ஆராய்ந்­தனர்.

அமைச்­சர்­க­ளுடன் அமைச்­சரின் பிரத்­தி­யேக செய­லா­ளரும், ஹஜ் குழு உறுப்­பி­ன­ரு­மான எம்.எச்.எம்.பாஹிம், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களப் பணிப்­பாளர் ஸமீல், ஹஜ் குழுத்­த­லைவர் கலா­நிதி எம்.ரி.சியாத்  ஆகி­யோரும் கலந்து கொண்­டனர் என்றார். 

ஹஜ் கட­மையில் ஈடு­பட்­டி­ருக்கும்  அமைச்­சர்கள் ஹலீம், பெளஸி ஆகி­யோரும், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் மற்றும்  அரச ஹஜ் குழுத்­த­லைவர்  உட்­பட  உறுப்பினர்களும்,  முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர்  ஸமீல் ஆகியோரும் எதிர்வரும் 17 ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளனர். 

1 comment:

  1. இஸ்லாத்தில் கொடுக்கல் வாங்கள் மிக முக்கியமான விடயம் அது போன்ற ஒரு முக்கியமான கொடுக்கல் வாங்கல்தான் ஹஜ்ஜுக்கு அனுப்பும் முகவர்களின் வேலை அனுப்புவதாக பணத்தை பெற்றுக்கொண்டால் முடியாமல் போகும் பட்சத்தில் பணத்தை திருப்பி கொடுப்பதுதான் சிறந்த வழி முறை.ஹஜ்ஜைகலையே இவ்வாறு ஏமாற்றும் இந்த முகவர்கள் தொழிலுக்காக வெளிநாடு செல்ல பணம் கொடுத்தவர்களை என்ன பாடு படுத்தவார்கள்.உண்மையான முஸ்லிம் முகவர்களாக இருந்தால் மரியாதையாக பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும்.இவ்வாறு பத்திரிகைகளிலும் கோட்டுகளிலும் நார வேண்டிய அவசியம் இல்லை.கன்னிப்பாக குர் ஆனில் மிக நீண்ட வசனம் கொடுக்க வாங்கல் கடன் சம்மந்தமானதுதான்.இவ்வாறு மார்க்கத்தையும் சமுதாயத்தையும் தலை குனிய வைக்கும் விடயங்களில் ஈடுபடும் முகவர்களின் முகவர் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்ய வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.