Header Ads



முஸ்லிம்களிடம் மன்னிப்புகேட்டு, பாவத்தை கழுவுங்கள் - இந்து முன்னணிக்கு சிபிசந்தர் அறிவுரை

முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டு பாவத்தை கழுவுமாறு இந்து முன்னணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், திரைப்பட இயக்கநருமான சிபிசந்தர் அறிவுரை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது...

கோவையில் ஆர்ப்பாட்டம் என்கிற பெயரில் உங்கள் கடையை சூறையாடி விட்டார்களே அந்த கயவர்களை சபித்தீர்களா கடையின் உரிமையாளரான இஸ்லாமிய உறவிடம் கேட்டபோது...

என் பொருட்களை கொள்ளையடித்து என் வயிற்றிலும் என் குழந்தைகள் வயிற்றிலும் அடித்துவிட்டனர்.

ஆனால் அல்லாஹ் எம்மை பசியாற்றுவார் திருடிய பொருட்கள்தான் அவர்களின் பசியை போக்கும் என்றால் நான் சபிக்க மாட்டேன் மாறாக இனியாவது அல்லாஹ் அவர்களின் திருட்டு பழக்கத்தை போக்க ஏக இறைவனிடம் வேண்டுவேன் என்றார்.

எனவே தேச பக்தர்கள் இஸ்லாமியரிடம் மன்னிப்பு கேட்டு பாவத்தை கழுவ வேண்டும்.

மேற்கண்டவாறு சிபிசந்தர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.