Header Ads



நாட்டில் உள்ள அனைத்து பிரஜைகளுக்கும் "அனர்த்த காப்பீடு"

நாட்டில் உள்ள அனைத்து பிரஜைகளுக்கும் அனர்த்த காப்பீடு வழங்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

திடீர் அனர்த்தங்களின் போது பாதிக்கப்படுபவர்கள் தத்தமது கிராம அலுவலர்களை சந்தித்து தமது நிவாரணப் பணங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

அவசர நிலைமை, தீப்பரவல், காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகுதல், தமது விளைச்சல்களுக்கு பாதிப்பு ஏற்படல் போன்ற சந்தர்ப்பங்களில் இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.