Header Ads



வெலிக்கடை சிறையில், மரணதண்டனை கைதியாக துமிந்த


மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இன்று துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து துமிந்த உட்பட ஐவரும் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதன்போது துமிந்தவை மக்கள் சூழ்ந்து கொண்டதுடன், இவரை விடுதலை செய்யுமாறு கண்ணீர் விட்டு கதறிஅழுது ஒரு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

பின்னர் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் துமிந்த சிறைச்சாலைக்கு சென்றார்.

1 comment:

Powered by Blogger.