Header Ads



ஜனாதிபதி மாளிகையின் செலவுகள் அதிகம் என்பதால், நான் அங்கு வசிக்கவிரும்பவில்லை - மைத்திரி


கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் மாதாந்த மின் கட்டணம் 75 லட்சத்துக்கு அதிகம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன் அதன் பராமரிப்பு செலவுகள் அதிகம் என்பதாலேயே தான் அங்கு வசிக்கவிரும்பவில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.

தான் தற்போது வசிக்கும் வீட்டில் வசிப்பதற்கு முதல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஒரு மாதம் அளவில் வசித்ததாகவும், இதன்போது அங்கு அதிகம் செலவு ஏற்பட்டதை அடுத்தே தான் அங்கிருந்து வெளியேறியதாகவும் ஜனாதிபதிசுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ஒருவர் வசிக்கும் போது அதன் பராமரிப்பு உள்ளிட்டவைகளுக்கு அதிகம் செலவு ஏற்படுவதாகவும், அங்கு அமைந்துள்ள மின்சார நீச்சல் தடாகம், உடற்பயிற்சி மையம், விளையாட்டு மைதானம் என்பவற்றின் பராமரிப்புகளுக்கு அதிகம் செலவு ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண நேரத்தை போல் அல்லாமல் ஜனாதிபதி ஒருவர் அங்கு வசிக்கும் பொழுது அங்கு24 மணி நேரமும் மின்சார விளக்குகள் எரிவது பாதுகாப்பு காரணங்களால் அவசியம்என்றும் தெரிவித்துள்ள ஜனாதிபதி, குறித்த ஜனாதிபதி மாளிகையானது இடிந்துவிழுவதற்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.