Header Ads



றிசாத் பதியுதீனின் கவனத்திற்கு..!

புத்தளம் தொகுதியில் "மணியக்காரன் வவுன்" என்றழைக்கப்படும் வீதி ஊடறுத்து செல்லும் பிரதான கிராமங்களான கரம்பை, உலுக்காப்பள்ளம், நாயக்கர்ச்சேனை, புழுதிவயல், விருதோடை, நல்லாந்தழுவ, கடையாமோட்டை, பாலச்சோலை, தொடுவாவ, கணமூலை, சமீரகம, பெருக்குவட்டான், கொத்தாந்தீவு, சின்னப்பாடு, கட்டைக்காடு முதலான பகுதிகளில் வாழும் மூவின மக்களும் பல்வேறு அபிலாஷைகளுடன் நீண்ட காலமாக இருந்து வருகின்றனர். 

இந்நிலையில் அவர்கள் இந்த நல்லாட்சி அரசு தமக்கு பின்வரும் தேவைகளை செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

1. புதிய பொலிஸ் நிலையம்

2. புதிய தபாலகம்

3. புதிய மருத்துவமனை

4. நவீன விளையாட்டரங்கு

5. மணியக்காரன் வவுன் என்றழைக்கப்படும் பாதையில் மேலும் காப்ட இட வேண்டிய வீதி அபிவிருத்தி 

6. தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுத் தரும் இளைஞர் யுவதிகளுக்கான ஆடைத் தொழிற்சாலை 

முதற்கட்டமாக இவைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம் நவவி அதிக ஈடுபாட்டுடன் அவரின் கட்சித் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனின் துரித கவனத்துக்கு கொண்டு வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.

No comments

Powered by Blogger.