Header Ads



வீதியில் கைவிடப்பட்ட குழந்தை பசியில் அழ, பாலூட்டிய பொலிஸ் உத்தியோகஸ்தர்

வீதியில்   கைவிடப்பட்ட குழந்தை / பசியில் அழ  பாலூட்டிய பொலிஸ் உத்தியோகஸ்தர்
மொனராகலை வெல்லவாய பிரதேசத்தில் வீதியில் கைவிடப்பட்ட நிலையில், பிறந்து சுமார் நான்கு மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குழந்தையை நேற்று வெல்லவாய நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று ஆஜர்ப்படுத்தி அனுமதியை பெற்ற பின்னர், பொலிஸார் குழந்தையை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

பசியில் அழுத குழந்தைக்கு, இந்த குழந்தையை போன்ற குழந்தை இருக்கும் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் பாலூட்டியுள்ளார்.

குழந்தையை கைவிட்டுச் சென்றவர்கள் யார் என்பதை கண்டறிய வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.