Header Ads



முஸ்லிம் கிரா­மங்­களில் சிங்­க­ள­வர்­களும், சிங்­கள கிரா­மங்­களில் முஸ்­லிம்­களும் குடி­யேற்­றப்­பட வேண்டும்

-விடிவெள்ளி  ARA.Fareel-

நாட்டில் மக்கள் சிங்­கள கிராமம், முஸ்லிம் கிராமம், தமிழ் கிராமம் என பிரிந்து வாழ்­வ­தி­னா­லேயே இன ரீதி­யி­லான மோதல்கள் ஏற்­ப­டு­கின்­றன.

கல்­ஹின்னை சம்­ப­வமும் இதன் பின்­ன­ணி­யிலே இடம்­பெற்­றுள்­ளது. எனவே இவ்­வா­றான சம்­ப­வங்­களைத் தவிர்ப்­ப­தற்கு முஸ்லிம் கிரா­மங்­களில் சிங்­க­ள­வர்­களும் சிங்­கள கிரா­மங்­களில் முஸ்­லிம்­களும் குடி­யேற்­றப்­பட வேண்டும் என சிங்­ஹலே அமைப்பின் செய­லாளர் மெதில்லே பஞ்­சா­லோக தேரர் தெரி­வித்தார். 

கல்­ஹின்­னையில் இடம்­பெற்ற சம்­ப­வத்­தி­னை­ய­டுத்து காயங்­க­ளுக்கு உள்­ளாகி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள மூன்று பெரும்­பான்மை இனத்­த­வர்­க­ளையும் சிங்­ஹலே அமைப்பின் பிர­தி­நி­திகள் பார்­வை­யிட்­டனர்.

பின்பு இது தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே மெதில்லே பஞ்­சா­லோக தேரர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், 
“நாட்டில் நடை­பெ­று­கின்ற இன ரீதி­யி­லான மோதல்­க­ளுக்கு அர­சாங்­கமே பதில் கூற வேண்டும். இன நல்­லி­ணக்கம் பற்றி பேசும் அரசு ஊட­கங்கள் மூலமே நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றன.

நல்­லி­ணக்­கத்தை ஊட­கங்கள் மூலம் மாத்­திரம் ஏற்­ப­டுத்தி விட முடி­யாது. 

அளுத்­க­மையில் இடம்­பெற்ற சம்­பவம் பற்றி தொடர்ந்து பேசி வரு­கிறோம். ஆனால் அளுத்­கம போன்ற சம்­ப­வங்கள் மீண்டும் ஏற்­ப­டா­தி­ருக்க எந்த நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

இத­னா­லேயே இன மோதல்கள் கல்­ஹின்­னையில் மாத்­திரம் அல்ல மற்றும் பல இடங்­க­ளிலும் உரு­வா­கின்­றன. 

இன்று நாட்டு மக்கள் இன ரீதி­யி­லான வல­யங்­க­ளாகப் பிரிந்து வாழ்­கி­றார்கள். வடக்கு, கிழக்கு என பிரித்து பேசு­கி­றார்கள்.

வடக்கில் தமி­ழர்­களும் கிழக்கில் முஸ்­லிம்­களும் வாழ்­கி­றார்கள். தெற்கில் சிங்­க­ளவர் தமிழர் முஸ்­லிம்கள் என்று இணைந்து வாழ முடி­யு­மென்றால் கொழும்பு போன்ற நக­ரங்­களில் எல்லா இன­மக்­களும் வாழ முடி­யு­மென்றால் ஏன் வடக்கு கிழக்கில் வாழ முடி­யாது. 

வடக்­கிலும் கிழக்­கிலும் சிங்­க­ள­வர்கள் குடி­யேற்­றப்­பட வேண்டும். யாழ்ப்­பா­ணத்தில் சிங்­கள கிராமம் ஒன்று உள்­ளது. அங்கு சிங்­க­ள­வர்­களும் தமி­ழர்­களும் ஒற்­று­மை­யா­கவே வாழ்­கி­றார்கள். ஆனால் வடக்­கி­லுள்ள அர­சி­யல்­வா­தி­களே அவர்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்தைச் சிதைக்­கி­றார்கள். வடக்கு முத­ல­மைச்­சரின் தமிழ் தீவி­ர­வாதம் அங்­குள்ள சிங்­க­ள­வர்­க­ளுக்கு எதி­ராக அமைந்­துள்­ளது. 

கல்­ஹின்னை ஒரு முஸ்லிம் கிராமம் அங்­கும்­புர ஒரு சிங்­கள பிர­தேசம் இத­னாலே அவர்கள் முரண்­பட்டுக் கொள்­கி­றார்கள். இரு பிர­தே­சங்­க­ளிலும் இரு இன­மக்­களும் கலந்து வாழ்ந்தால் இப்­பி­ரச்­சினை ஏற்­ப­டாது. எனவே நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்க முயற்­சிக்கும் ஆட்­சி­யா­ளர்கள் திட்­ட­மிட்டு செயற்­பட வேண்டும். 

கல்­ஹின்­னையில் இடம்­பெற்ற மோதல்­க­ளுக்­கான கார­ணங்­களை கண்­ட­றி­வதன் மூலமோ சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்கப்படுவதினாலோ இரு சமூகங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்பட்டுவிடப் போவதில்லை.

இதன் மூலம் மேலும் குரோதங்களே வளர்க்கப்படும். எனவே அரசாங்கம் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சரியான திட்டங்களை வகுக்க வேண்டும் என்றார். 

5 comments:

  1. மூக்கு சளிக்கு தீர்வாக மூக்களை வெட்டச் சொல்கிறார்கள்.

    ReplyDelete
  2. If they ask cigarette and the shop owner say no cigarette here.. why they have to make violence ?

    This has nothing to do with their living style of people in Srilanka.

    Rather.. those stupid, problem makes should be brought to justice for inciting violence and taking power in to their hand. If Justice system in our country take strong action against to problem makers .. No violence will be in the country.

    All the problems and violence these days are from so called BLOOD group supporters only.

    No Muslim Violate the government Rules and Go to other places and make hate violence but it is other way.

    ReplyDelete
  3. Main problem is some Sinhalese people feel jelousy of some muslim doing good in business..
    Most of violence comes for economic or religiosity reasons ..
    Some are feel that Muslim do good in business and some feel that their religion is taken away..
    It is not right thinking all need to live..
    If Muslims do good in businNess it is good for the country..
    If any one wants to convert let them do it ..
    Give freedom of religions .
    Its birth rights of people...
    Why not ..
    Build nation of multi ethics and multiracial Sri Lankans
    War is war Brain power not religion to make Sri Lanka supreme..

    ReplyDelete
  4. பிறர் கருத்தை நாம் மதிக்க வேண்டும்.. ஆனால் உடன்படுவது உங்கள் விருப்பம். ....

    ReplyDelete

Powered by Blogger.