Header Ads



பழங்கால நினைவிடங்கள் அழிப்பு - இஸ்லாமியவாதிக்கு 9 ஆண்டுகள் சிறை

-BBC-

ஆஃப்ரிக்க நாடான மாலியைச் சேர்ந்த இஸ்லாமியவாதி ஒருவருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒன்பது ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

மாலியிலுள்ள புராதன நகரான டிம்பக்டூவில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல வழிபாட்டுத் தலங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அழிக்கப்பட்ட வழக்கில் தன்மீதான குற்றச்சாட்டை அஹ்மட் அல்-ஃபகி அல்-மஹ்டி ஒப்புக்கொண்டார்.

அல்-கயீதாவுடன் தொடர்புடையக் குழுவொன்று மாலியின் வடபகுதியை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பிறகு அங்கிருந்த ஏராளமான பழங்கால நினைவிடங்கள் அழிக்கப்பட்டன.

காலாச்சாரச் சின்னங்கள் சீரழிக்கப்பட்டது தொடர்பில் அந்நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும் முதல் நபர் இவரே.

தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்த அல்-மஹ்டி, தான் செய்த குற்றங்களை அடுத்தவர்கள் பின்பற்றக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.

1 comment:

  1. Yes they deserve capital punishment.what they are doing is to destroy the historical and monumental side in the name of original Islam.This is the conspiracy to deny the right of Muslims in their land by destroying the all the marks which coudl prove the existence Muslims in future time So Some group and and country helping to do this in the name of shirk.

    ReplyDelete

Powered by Blogger.