Header Ads



செல்லநாய்க்கு 8 ஐபோன்கள் வாங்கிக்கொடுத்தவர்


கடந்த வாரம் வெளியான ஆப்பிள் ஐபோன்-7 ஐ வாங்கிட சீன மக்கள் அனைவரும் வரிசையில் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால், சீனாவை சேர்ந்த கோகோவுக்கு மட்டும் அந்த கவலையில்லை.

கோகோ கேட்காமலேயே அதற்கு எட்டு ஆப்பிள் ஐபோன்கள் பரிசாகக் கிடைத்துள்ளன. சீனாவின் கோடீஸ்வரர்களில் ஒருவரான வாங் சியான்லினின் மகன் வாங் சிகாங் தனது வளர்ப்பு நாயான கோகோவுக்கு எட்டு ஆப்பிள் ஐபோன்களை பரிசாக வாங்கிக் கொடுத்துள்ளார்.

எட்டு ஐ-போன்கள் அட்டைப்பெட்டிகளுக்கு அருகில் கோகோ அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.வாங் சிகாங் கடந்த வருடம் கோகோவுக்கு இரண்டு ஆப்பிள் வாட்ச்களை வாங்கி அழகு பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.