Header Ads



முஸ்லிம் தாயும் மகளும் கொலை, 800 பேரிடம் விசாரணை, 17 பொலிஸ் குழுக்கள், 80 CID யினர் களத்தில்


-விடிவெள்ளி ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

ஏறா­வூரில் இடம்­பெற்ற இரட்டைப் படு­கொலைச் சம்­பவம் தொடர்­பாக இது­வரை 800 இற்கும் மேற்­பட்டோர் விசா­ரிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சுமார் 50 பேரிடம் வாக்­கு­மூ­லங்கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

பல்­வேறு கோணங்­களில் இடம்­பெற்று வரும் இந்த விசா­ர­ணை­களில் இது­வரை சந்­தே­கத்­திற்­கி­ட­மான பலர் விசா­ரிக்­கப்­பட்­டுள்­ள­தோடு வாக்­கு­மூ­லங்­களும் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.

இக்­கொலைச் சம்­ப­வத்­தோடு தொடர்­பு­பட்­ட­தாக கொலை, கொள்ளை, கற்­ப­ழிப்பு மற்றும் இதர குற்றச் செயல்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்ட சூத்­தி­ர­தா­ரி­களை விசா­ரணை செய்து மேலும்  அவர்­க­ளுக்­குள்ள குற்றச் செயல் வலைப்­பின்­னலை அறிந்து கொள்ள வேண்­டி­யுள்­ளது என்று மட்­டக்­க­ளப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் தினேஸ் கரு­ணா­னா­யக்க உறு­தி­படத் தெரி­வித்­தி­ருந்தார்.

அத்­துடன் ஏறா­வூரில் இடம்­பெற்ற இரட்டைப் படு­கொ­லைக்கும் அப்­பாற்­பட்­ட­தாக பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யோடு சம்­பந்­தப்­பட்ட பல்­வேறு விசா­ர­ணை­களை தாங்கள் பல்­வேறு கோணங்­களில் மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் அவர் தெரி­வித்­தி­ருந்தார்.

பொலிஸ் மா அதி­பரின் உத்­த­ர­வுக்­கி­ணங்க கொலை­யா­ளி­களைத் தேடி 17 விஷேட பொலிஸ் குழுக்­களும் 80 இற்கு மேற்­பட்ட புல­னாய்வு உத்­தி­யோ­கத்­தர்­களும் புலன் விசா­ர­ணை­களில் ஈடு­பட்­டி­ருந்­தனர்.

இக்­கொ­லைகள் தொடர்­பாக இது­வரை 6 பேர் கைது செய்­யப்­பட்டு ஒக்­டோபர் 05 ஆம் வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

மட்­டக்­க­ளப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவு ஏறாவூர் நகர் முகாந்­திரம் வீதி  முத­லா­வது ஒழுங்­கையில் உள்ள வீட்டில் ஒன்­றாக வசித்து வந்த நூர்­மு­ஹம்­மது சித்தி உசைரா (வயது 56) மற்றும் அவ­ரது திரு­ம­ண­மான மக­ளான ஜெனீரா பானு மாஹிர் (வயது 32) ஆகியோர் மர்மமான முறையில் பொல்லால் தாக்கப்பட்ட நிலையிலும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையிலும் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் சடலங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தன.

No comments

Powered by Blogger.