Header Ads



7 வயது சிறுவனை கொதிநீருக்குள் தள்ளிய, வளர்ப்பு தாய் கைது

-Tm-

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்ரஸ்பி தோட்ட பெரிய சூரியகந்தைப் பிரிவிலுள்ள 7 வயது சிறுவனொருவனை, அவனது சிறிய தாய், கொதிநீரில் தள்ளியதில், குறித்த சிறுவனின் கைகள் மற்றும் கண்கள் ஆகியன வெந்து போயுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம், நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற போது, சிறுவனின் தந்தை விறகு சேகரிப்பதற்காகச் சென்றுள்ளதாக அறியமுடிகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் சிறுவனின் தந்தையான பிச்சை சரவணராஜால் இன்று திங்கட்கிழமை (05) வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது.

மல்லியப்பு தமிழ் வித்தியாலயத்தில் 2ஆம் ஆண்டில் கல்விப்பயின்று வரும் யுவராஜ் (வயது 7) எனும் சிறுவனே இவ்வாறு வளர்ப்புத் தாயினால் கொதிநீரில் தள்ளப்பட்டு பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

1 comment:

  1. The culprit should be punished without any questions.

    ReplyDelete

Powered by Blogger.