Header Ads



7 ஆம் திகதி, சுனாமி ஒத்திகை


நாட்டில் மீண்டும் சுனாமி வந்தால் என்ன செய்வது என்று மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு சர்வதேச சுனாமி ஒத்திகையொன்றினை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 7ஆம் திகதி குறித்த ஒத்திகை இடம்பெற உள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், இந்த ஒத்திகை நாட்டின் 14 மாவட்டங்களில் நடாத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதில், சுனாமியின் போது மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வது தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்படுகிறது.

2004 ஆம் ஆண்டு சுனாமிக்குப் பின்னர் இவ்வாறான ஒத்திகைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.