Header Ads



இலங்கை தூதுவர் தாக்குதல் விவகாரம் - 5 பேர் மலேசியா பொலிஸாரால் கைது

மலேசியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகரை தாக்கிய ஐந்து பேர் மலேசியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே அந்த தாக்குதல் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டமைக்கு எதிராக இலங்கையின் அரசாங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது.

இத் தாக்குதலுக்குள்ளான உயர்ஸ்தானிகர் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் கோலாலம்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை, மகிந்த ராஜபக்சவுடன் மலேசியாவிற்கு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்தவர்கள் இன்று நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.