Header Ads



மங்களவிடம் 500 மில்லியன், இழப்பீடு கோரும் தமரா

வெளிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீர வெளியிட்ட சில கருத்துக்களால் தனக்கு மிகுந்த அவமானம் ஏற்பட்டதாக கூறி, ஜெனிவாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் தமரா குணநாயகம், 500 மில்லியன் இழப்பீடு கோரி, மங்கள சமரவீரவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 2ம் திகதி கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தன்னை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என அடையாளப்படுத்தியுள்ளதாக தமரா குணநாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இது சம்பந்தமாக சட்டத்தரணி மூலம் தாம் அனுப்பிய கடிதத்திற்கு வெளிவிவகார அமைச்சர் பதிலளிக்காத காரணத்தினால், வழக்கு தாக்கல் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ஒருவரிடம் மிகப் பெரிய இழப்பீட்டு தொகையை கேட்டு இலங்கையின் முன்னாள் தூதுவர் ஒருவர் தாக்கல் செய்துள்ள முதல் வழக்கு இதுவாகும்..

No comments

Powered by Blogger.