Header Ads



3 பேரின் மரபணுக்களுடன் உருவான, முதல் குழந்தையை அமெரிக்க மருத்துவர்கள் உருவாக்கினர்

-BBC-

மூன்று பேரின் மரபணுக்களைக் கொண்டு கருத்தரிக்கும் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் உருவான முதல் குழந்தை பிரசவிக்கப்பட்டிருக்கிறது என்று அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

மூன்று பேரின் மரபணுக்களை உள்ளடக்கும் இந்த தொழில்நுட்பம், அபூர்வமான மரபணு சிதைமாற்றங்கள் கொண்ட பெற்றோர்கள் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வழி வகுக்கிறது.

இந்த அறிவிப்பு 'நியூ சையண்டிஸ்ட்' சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

மூன்று பேரின் மரபணுக்களை உள்ளடக்கும் இந்த தொழில்நுட்பம், அபூர்வமான மரபணு சிதைமாற்றங்கள் கொண்ட பெற்றோர்கள் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வழி வகுக்கிறது.

இந்தத் தொழில் நுட்பத்தின் மூலம் பிறந்த ஐந்து மாத ஆண் குழந்தைக்கு, அதன் தாய் மற்றும் தந்தையிடமிருந்து கிடைக்கும் வழக்கமான மரபணுவைத் தவிர, கூடுதலாக ஒரு மரபணுக் கொடையாளியிடமிருந்த சிறிய ஒரு மரபணுக் குறியீடும் கிடைத்திருக்கிறது.

அந்தக் குழந்தையின் ஜோர்டானியத் தாயின் மரபணுவில் இருக்கும் ஒரு பிரச்சனை குழந்தைக்கு இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவே இந்த முன்னெப்போதும் செய்திராத நடவடிக்கையை அமெரிக்க மருத்துவர்கள் எடுத்தனர்.

இந்த சிகிச்சை முறை மருத்துவத்தில் புதியதொரு சகாப்தத்தை உருவாவதைக் காட்டுகிறது என்றும், இதே போன்று அபூர்வ மரபணு பிரச்சனைகள் கொண்ட குடும்பங்களுக்கு இது உதவும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஆனால் `மிட்டொகோண்ட்ரியல்` நன்கொடை (mitochondrial donation) என்றழைக்கப்படும் இந்த சர்ச்சைக்குரிய புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுமுன், கடுமையான சோதனைகள் செய்யப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

6 comments:

  1. “மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம்” (திருக்குர்ஆன் 49:13)

    இந்த வசனத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் பொய்யாக்கி விட்டனரா?

    ReplyDelete
    Replies
    1. என்னா ஒரு மடையனப்பா நீ? அமெரிக்கன் அல்ல. நீங்கள் கடவுள் என்று சொல்லுகின்ற எத்தனை கடவுள் வந்தாலும் குர்ஆனின் ஒரு எழுத்தையும் பொய்யாக்க முடியாது . ஏனென்றால் உங்கள் அனைத்து கடவுள்களையும் படைத்தவன் அல்லாஹ்தான்.முதலில் அந்த வசனத்தின் அர்தத்தை சரியாக படியுங்கள் . இதறகுத்தான் சொல்வது வழிகேடு என்று.

      Delete
  2. Allah created Adam by clay first-time. Allah created his wife without mother. Allah created Isaa without Father. please look at the whole quran.

    ReplyDelete
  3. Dear Hari
    Quran is/will never be wrong you better wait until the child grow up and let him live.Then we can see the results -Wait until that to comment on the Quran

    ReplyDelete
  4. Hari Thivahar
    நீங்கள் சொன்ன வசனத்தை மட்டுமல்ல, அல் குர்ஆனின் எந்த வசனத்தையும் எவனாலும் பொய்யாக்க முடியாது. மேலும் எந்த முரண்பாட்டைக்கூட அல் குர்ஆனில் காணமுடியாது (பைபிளில் பல முரண்பாடுகள் உள்ளன). ஏனெனில் இந்த அல் குர்ஆன் ஆனது மனிதர்களின் வார்த்தைகள் அல்ல. அந்த வார்த்தைகள் ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் வார்த்தைகள். முஸ்லிம்கள், இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், நாத்திகர்கள், மற்றும் ஏனைய மனிதர்கள் அனைவரையும் படைத்த ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் வார்த்தைகள்.
    Hari உங்களைப் படைத்ததும் அல்லாஹ்தான். அதை நீங்கள் மரணிக்கும் முன்னர் ஏற்றுக் கொண்டுவிடுங்கள். இல்லாவிட்டால் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் தோல்வி அடைவீர்கள். நீங்கள் எப்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளப் போகிறீர்கள்??? தாமதிக்க வேண்டாம்.
    நீங்கள் கூறிய வசனத்தின் கருத்து இதுதான்.
    இறைவன் மனிதர்கள் அனைவரையும் நோக்கி, நீங்கள் அனைவரும் ஒரே அசலில் இருந்து தோன்றியவர்கள். அதாவது ஒரே ஆண்,ஒரே பெண்ணிலிருந்து உங்கள் முழு மனித இனமும் தோன்றி இருக்கிறது. இன்று உலகில் பல்வேறு இனங்கள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் ஆரம்பத்தில் தோன்றிய ஒரே இனத்தின் கிளையிலிருந்து பரவின. அந்த ஓரினமும் ஒரே தாய் தந்தையிலிருந்தே தோன்றியதாகும். அதாவது ஆதாம், ஏவாள் என்ற இருவரிலும் இருந்துதான் இப்போதுள்ள எல்லா மனிதர்களும் தோன்றியுள்ளனர். இது அமெரிக்க விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பிலிருந்து எவ்வாறு முரண்படுகின்றது???? நீங்கள் கொஞ்சம் சிந்திப்பீரகளாயிருந்தால் உண்மையை ஏற்றுக்கொள்வீர்கள். மேலும் நீங்கள் கூறிய வசனம் இன்னும் முடிவடையவில்லை. அந்த வசனம் பின்வருமாறு தொடருகின்றது.
    மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (அல்குர்ஆன் 49:13)

    ReplyDelete
  5. Hari

    Scientists are not mad about religions and they don't
    do anything to challenge religions . They do what's
    good and needful for the advancement of humans on
    this earth . Modern man is fully immersed in the
    world of technology. A couple of centuries back, man
    didn't fight against his natural death but today his
    death is being delayed for many years with surgeries
    and new medications . All those who very strongly
    believe in different religions race to the hospitals
    once death approaches . Nobody wants to die even at
    his 90s and a couple of days back a bedbound 90yr
    old was rushed to the hospital after a heart attack
    for the second time in two weeks . Treatment was
    given and after ten days in hospital he's back home
    escaping death call . Yes , I know people will argue
    one day he must go and it is not difficult to say
    that since everyone on earth faces death one day .
    But people love to live longer and science is just
    doing what it can to achieve more for us . So , we
    must be thankful for them for many of their human
    friendly achievements.

    ReplyDelete

Powered by Blogger.