Header Ads



கல்­ஹின்னை பள்ளிவாசல்கள், தக்கியாக்களுக்கு 24 மணிநேர பொலிஸ் பாதுகாப்பு

-விடிவெள்ளி  ARA.Fareel-

கல்­ஹின்­னையில் புதன்­கி­ழமை இரவு இடம்­பெற்ற இரு தரப்பு மோதல்­க­ளை­ய­டுத்து பள்­ளி­வா­ச­லொன்றும் பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கா­மை­யி­லுள்ள முஸ்லிம் ஒரு­வரின் வீடும் தாக்­கப்­பட்­டுள்­ள­மையினால் கல்­ஹின்னை மக்கள் பீதிக்­குள்­ளா­கி­யுள்­ளனர்.

கல்­ஹின்னை தெப்­பி­ல­கொல்ல பள்­ளி­வாசல் இனந் தெரி­யாத கும்­ப­லினால் வியா­ழக்­கி­ழமை இரவு 9.30 மணிக்கும் 10மணிக்கும் இடையில் தாக்­கு­தல்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளது. பள்­ளி­வா­சலின் 10 கண்­ணா­டிகள் உடைந்­துள்­ளன.

பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்­ட­போது பள்­ளி­வா­சலின் பேஷ் இமாம் மேல் மாடியில் இருந்­துள்ளார்.

பொலிஸார் பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கி­லுள்ள கடை­யொன்றில் பொருத்­தப்­பட்­டி­ருந்த சி.சி.ரி.வி. கமரா பதி­வு­களைப் பெற்­றுள்­ளனர். அப்­ப­திவில் முக மூடி­ய­ணிந்த மூவரின் படங்கள் பதி­வா­கி­யுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

நேற்று மாலை முஸ்லிம் சமய விவா­கர மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் கல்­ஹின்­னைக்கு விஜயம் செய்து பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் மற்றும் ஊர் பிர­மு­கர்­களைச் சந்­தித்து விப­ரங்­களைக் கேட்­ட­றிந்தார்.

அமைச்சர் ஹலீம் ஹஜ் கட­மையை நிறைவு செய்­து­விட்டு நேற்று மதி­யமே கண்­டிக்கு வந்து சேர்ந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

தாக்­கு­த­லுக்­குள்­ளான தெப்­பி­ல­கொல்ல பள்­ளி­வா­ச­லுக்கும் வீட்­டுக்கும் அமைச்சர் ஹலீம் நேரடி விஜ­யத்­தினை மேற்­கொண்டார். 

தாக்­கு­தல்­களில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை இனங் கண்டு சட்­டத்தின் முன் நிறுத்­து­வ­தற்­கான சகல நட­வ­டிக்­கை­க­ளையும் இர­க­சியப் பொலிஸார் மேற்­கொண்­டுள்­ள­தா­கவும் நீதி நிலை நாட்­டப்­ப­டு­மெ­னவும் அமைச்சர் ஹலீம் உறு­தி­ய­ளித்தார்.

கல்­ஹின்னை தாக்­குதல் சம்­ப­வத்தில் காயங்­க­ளுக்­குள்­ளாகி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்­க­ளையும் அமைச்சர் ஹலீம் பார்­வை­யிட்டார்.

அமைச்சர் அங்­கும்­புர பொலிஸ் நிலை­யத்­துக்கும் சென்று பொலி­ஸா­ருடன் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்டார்.

இதே­வேளை பள்­ளி­வா­ச­லி­லி­ருந்தும் சுமார் 50 மீட்டர் தூரத்­தி­லி­ருந்து ஹில்மி செய்­னுதீன் என்­ப­வ­ரது வீடும் தாக்­கு­தல்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளது. வீட்டின் கேட் கோட­ரியால் வெட்­டப்­பட்டு திறக்­கப்­பட்டு வீட்டின் யன்­னல்கள் உடைக்­க­ப்­பட்­டுள்­ளன. கதவை அல­வாங்­கினால் திறப்­ப­தற்கு முயற்­சித்த வேளை வீட்­டி­லுள்­ள­வர்கள் சப்­த­மிட்­ட­தை­ய­டுத்து தாக்­குதல் தாரிகள் அல­வாங்­கினை அவ்­வி­டத்­தி­லேயே விட்டு விட்டு தப்பிச் சென்­றுள்­ளனர்.

வீட்டின் உரி­மை­யாளர் ஹில்மி செய்­னுதீன் சம்­பவம் தொடர்பில் விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­விக்­கையில்;
வேன் ஒன்றில் வந்த சுமார் 6 அல்­லது 7 பேர் வரை­யி­லான குழு­வொன்றே முக­மூ­டி­ய­ணிந்து கொண்டு எனது வீட்­டையும் பள்­ளி­வா­ச­லையும் தாக்­கி­யுள்­ளது. 

கொழும்­பி­லி­ருந்து வருகை தந்த இர­க­சிய பொலிஸார் மற்றும் விசேட பொலிஸ் குழுக்கள் விசா­ர­ணை­களை நடத்­தி­யுள்­ளன. இது தொடர்­பாக என்­னிடம் 8 வாக்கு மூலங்கள் பெறப்­பட்­டுள்­ளன என்றார்.

சம்­பவம் தொடர்பில் அங்­கும்­புர பொலி­ஸாரும் இர­க­சிய பொலி­ஸாரும் விசா­ர­ணை­களைத் தொடர்ந்து முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். 

தெப்­பி­ல­கொல்ல பள்­ளி­வாசல் செய­லாளர் எம்.என்.எம். ரிசாத் சம்­பவம் தொடர்பில் விடி­வெள்­ளிக்கு விளக்­க­ம­ளிக்­கையில்;
‘தாக்­குதல் இடம்­பெற்­ற­போது பள்­ளி­வாசல் ஹஸரத் மேல் மாடியில் இருந்து பயத்­தினால் சப்­த­மிட்­டுள்ளார். வெளியே எட்டிப் பார்த்­த­போது தாக்­குதல் தாரிகள் ஓடி­யுள்­ளனர்.

அவர்­க­ளது உரு­வங்கள் பக்கத்திலிருந்த கடையின் சி.சி.ரி.வி. கமராவில் பதிவாகியுள்ளன. யார் இந்த தாக்குதலை மேற்கொண்டது என்பது தெரியவில்லை. பள்ளிவாசலுக்கு 24 மணி நேர பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கல்ஹின்னையில் பொலிஸ் ரோந்துச் சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்ஹின்னை பகுதியிலுள்ள 3 ஜும்ஆ பள்ளிவாசல்கள் மற்றும் 11 தக்கியாக்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன.

2 comments:

  1. பெபிலகொள்ள எனுமிடத்திலுள்ள பள்ளியே அது. மேலும் இரண்டு ஜீம்மாப் பள்ளிதான் இருக்கின்றது ஹல்கொள்ள எனும் அன்டிய ஊரினையும் சேர்த்துத்தான் மூன்று.

    ReplyDelete
  2. WHY yahapalanaya there police needed?

    ReplyDelete

Powered by Blogger.