Header Ads



ஷகீப் படுகொலை - 22, 23 வயதுடைய 2 இளைஞர்கள் இன்று கைது

கொழும்பு பம்பலப்பிட்டியை சேர்ந்த செல்வந்தரான வர்த்தகரை கடத்திச் சென்று கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரினால் இவர்கள் இன்று -01- கைது செய்யப்பட்டுள்ளனர்.

22 மற்றும் 23 வயதான இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு 4, பம்பலப்பிட்டி இலக்கம் 21 கொத்தலாவல அவனியூவில் வசித்து வந்த 29 வயதான மொஹமட் ஷாகிப் சுலைமான் என்ற வர்த்தகர் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் திகதி இரவு 9.15 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டார்.

கடத்திச் செல்லப்பட்ட வர்த்தகர் கொலை செய்யப்பட்ட நிலையில், பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு கிராண்ட்பாஸ் மற்றும் ஆட்டுப்பட்டி தெரு ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இருவரே இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.