இந்த அழகான குழந்தை 2000 ரூபா - இலங்கையில் அகோரம்
ஆறு மாத பச்சிளங் குழந்தையை ரூபா இரண்டாயிரத்துக்கு விற்பனை செய்வதற்கு முயன்ற தாயை கண்டி பொலிஸ் நிலைய மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவினர் நேற்று முன்தினம் (6) கைது செய்துள்ளனர். கட்டுகஸ்தோட்ட – பொலிஸ்பிரிவிலுள்ள வெரலகம பகுதியைச் சோந்த பெண் ஒருவரே இவ்வாறு 6 மாத பெண் குழந்தையை விற்க முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெளிநாடு சென்று நாடு திரும்பிய இப் பெண் கற்பிணியாகவுள்ள நிலையை கண்ட தனது கணவன் வீட்டில் தங்கவைக்க மறுத்துள்ளதனால் பெண் தமது உறவினர்களின் வீட்டில் தங்கியுள்ள நிலையிலே பிரவசம் இடம் பெற்றுள்ளதாகவும் மற்றும் குழந்தையுடன் தான் வீட்டுக்குச் செல்ல தடை என்ற காரணத்தினால் இவ்வாறு தனது குழந்தையை விற்பனை செய்ய முற்பட்டதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.
மேலும் சந்தேக நபர் நேற்று முன்தினம் கட்டுகஸ்தோட்ட நகருக்கு முச்சக்கர வண்டி யொன்றில் சென்ற சமயம் அப்பெண்ணின் செயற்hடுகள் ஏதோ சந்தேக நிலையை தோற்றுவித்துள்ளதையடுத்து நபர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய இரகசிய தகவலையடுத்து மேற்படி தாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ள நபர் தொடர்பில் தொடர்ந்தும் கண்டி பொலிஸ் நிலைய மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ஜானகி செனவிரத்ன தலைமையில் தற்போது விசாரணைகள் இடம் பெற்ற வருகின்றன.
எம்.ஏ.அமீனுல்லா
Post a Comment