Header Ads



உலக முடிவை பார்வையிடச் சென்று, காணாமல்போன 12 மாணவர்களும் பத்திரமாக மீட்பு

உலக முடிவை பார்வையிடச் சென்ற நிலையில் காணாமல் போன 12 பாடசாலை மாணவர்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.  

நானுஓய பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கையின்போது 12 மாணவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு - கொலன்னாவ பகுதியில் இருந்து உயர்தர மாணவர்கள் 12 பேர் உலக முடிவை பார்வையிடச் சென்று காணாமல் போனதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.