Header Ads



நாடு முழுவதும் இருமடங்கு வேகம் கொண்ட Wi-Fi வசதி

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் நாடு முழுவதும் புதிய தொழிநுட்பத்தினூடாக இருமடங்கு வேகம் கொண்ட Wi-Fi வசதி பெற்றுக் கொடுக்கப்படும் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். 

இதன்படி 400 இடங்களில் Wi-Fi வசதியை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 5 நிறுவனங்களிடம் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ  குறிப்பிட்டார். 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவிததார்.

No comments

Powered by Blogger.