Header Ads



அர­சியல் அழுத்தம், இழு­ப­றிக்கு மத்­தியில் MR லத்தீப்..!


-விடிவெள்ளி  MFM.Fazeer-

பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டையின் 11 ஆவது தள­ப­தி­யாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.  

கடந்த 9 ஆம் திகதி பொலிஸ் ஆணைக் குழு வழங்­கிய நிய­மனக் கடி­தத்தை அர­சியல் அழுத்தம் கார­ண­மாக கடும் இழு­ப­றிக்கு மத்­தியில் நேற்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர வழங்­கி­யுள்ளார்.

அதன்­ப­டியே நேற்று பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டையின் புதிய கட்­டளைத் தள­ப­தி­யாக அவர் நிய­மனம் பெற்றார்.

 இந் நிலையில் நேற்று கட்­டளைத் தள­ப­திக்­கான நிய­மனக் கடி­தத்தைப் பெற்­றுக்­கொண்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப், இன்று வெள்­ளிக்­கி­ழமை பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­படை தலை­மை­ய­கத்தில் தனது கட­மை­களைப் பொறுப்­பேற்றுக் கொள்­ள­வுள்ளார். 

இதன்­போது அவ­ருக்கு அங்கு விஷேட அணி­வ­குப்பு மரி­யா­தை­யொன்று எற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­துடன் அதனைத் தொடர்ந்து அவர் அதி­ர­டிப்­படை வீரர்­களை நோக்கி விஷேட உரை­யொன்­றி­னையும் நிகழ்த்­த­வுள்ளார்.

முன்­ன­தாக பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டையின் புதிய கட்­டளைத் தள­ப­தி­யாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்­தீபை  பொலிஸ் ஆணைக் குழு  கடந்த 8 ஆம் திகதி தேர்ந்­தெ­டுத்து  9 ஆம் திகதி அவரின் நிய­மனக் கடி­தத்தை பொலிஸ் மா அதி­ப­ருக்கு அனுப்­பி­யது.

எனினும் நேற்றுக் காலை வரை பல்­வேறு அர­சியல் அழுத்­தங்கள் கார­ண­மாக பொலிஸ் மா அதி­பரால் அந்த நிய­மனம் தொடர்பில் கட­மை­களை பொறுப்­பேற்­ப­தற்­கான நிய­மனக் கடி­தத்தை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்­தீ­பிடம் கைய­ளிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

இந்நிலையில் ஊட­கங்­களும் பல்­வேறு தரப்­பி­னரும் இது தொடர்பில் தொடர்ச்­சி­யாக குரல் எழுப்­பிய நிலையில், நேற்று பொலிஸ்மா அதி­பரை இது தொடர்பில் கேள்வி கேட்க தேசிய பொலிஸ் ஆணைக்­குழு தயா­ரான நிலை­யி­லேயே அந்த நிய­மனம் லத்­தீ­புக்கு வழங்­கப்ப்ட்­டது.

பொலிஸ் விஷேட அதி­ரடிப் படையின் 10 ஆவது கட்­டளைத் தள­ப­தி­யாக இருந்த ( ஒப்­பந்த அடிப்­ப­டையில் ) பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் பெரே­ராவின் ஒப்­பந்த காலம் கடந்த 8 ஆம் திக­தி­யுடன் முடி­வ­டைந்­த­தை­ய­டுத்து கட்­டளைத் தள­பதி பத­வியில் வெற்­றிடம் எற்­பட்­டது.

இந் நிலையில் கடந்த 9 ஆம் திகதி அதி­ர­டிப்­படை கட்­டளைத் தள­ப­தி­யாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்­தீபை நிய­மிக்க அனு­ம­தி­ய­ளித்த பொலிஸ் ஆணைக் குழு அதற்­கான நியமனக் கடிதத்தை பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளது.

இக் கடிதமே நேற்றைய தினம் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீபிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.