Header Ads



Mp களின் வாக­ன இறக்­கு­மதிக்கு 200 கோடி, தொலைபேசிக்கு 10 கோடி - நல்லாட்சி மீது கடும் விமர்சனம்

சுங்கத் தீர்வை இல்­லாமல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு வாக­னங்­களை இறக்­கு­மதி செய்யும் பொருட்டு கடன் வழங்க நட­வ­டிக்கை எடுக்­கும்­படி அர­சாங்கம் இல ங்கை வங்­கிக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

இந்த ஆலோ­ச­னை­யின்­படி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள வாகன அனு­மதிப் பத்­தி­ரத்தின் பெறு­ம­தி­யான 6,25000 அமெ­ரிக்க டொலர்­க­ளுக்­கான வங்கிக் கடனை அவர்கள் ெபற்றுக் கொள்ள முடியும். இதன்­படி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரொ­ரு­வ­ருக்கு 93 இலட்சம் ரூபா கட­னாக வழங்­கப்­படும். பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 225 பேருக்கும் வாக­னங்­களைக் கொள்­வ­னவு செய்­வ­தற்கு சுமார் 200 கோடி ரூபாவை இலங்கை வங்கி கட­னாக வழங்கும்.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு கடனை திருப்பிச் செலுத்த வரு­டாந்தம் 13 வீத வட்­டி­யுடன் ஏழு வருட கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது. பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரொ­ரு­வரின் பதவிக் காலம் ஐந்து வரு­டங்­க­ளாகும். ஏற்­க­னவே பதவிக் காலத்தில் ஒரு வருட காலம் பூர்த்­தி­யா­கி­யுள்­ளது. நான்கு வருட காலமே எஞ்­சி­யுள்­ளது. எப்­ப­டி­யி­ருந்தும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இந்த பத­வி­கா­லத்தின் பின்­னரும் இந்த கடனைச் செலுத்த மூன்று வருட காலம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்த வாகன கடனை ஒரு வருட காலத் தில் மீளச் செலுத்த வட்­டி­யில்­லாமல் மாதாந்த ஒரு இலட்சம் ரூபா­வுக்கு அதி­க­மாக செலுத்த வேண்டும். பாரா­ளுமன்ற உறுப்­பி­ன­ரொ­ரு­வ­ருக்கு மாதாந்தம் சகல கொடுப்­ப­ன­வு­க­ளுடன் சுமார் ஒரு இலட் சம் ரூபா­வ­ரையே கிடைக்கும்.

பொது மக்கள் கடன் பெறும்போது அந் தக் கடனை மீளச் செலுத்த கடன் பெறும்

நப­ருக்கு போதிய வரு­மானம் கிடைக்கின் ­றதா என அங்கு ஆராயப்படும் வருமான த்தில் 40 சத­வீதம் மாதாந்தம் கடன் செலு த்த வேண்­டி­யி­ருந்தால் கடன் வழங்கப்பட மாட்டாது. ஆனால், பாராளுமன்ற உறுப்பி னர்களுக்கு வங்கி இந்த நடைமுறையைப் பின்பற்றுவதில்லை என்பது குறித்து விமர் சனங்கள் எழுந்துள்ளன.

2

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொலைபேசி கட்டணம் 10 கோடி ரூபாவினால் உயர்வடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றினால் வழங்கப்பட்ட இரண்டு தொலைபேசிகளுக்கான கட்டணம் இதுவரை காலமும் அரசினாலேயே செலுத்தப்பட்டு வந்தது. எனினும் இந்த நடைமுறையில் அரசாங்கம் மாற்றம் கொண்டு வந்துள்ளது.

தொலைபேசி கட்டணங்களை செலுத்தாது மாதாந்தம் 50000 ரூபா தொலை பேசிக் கட்டண கொடுப்பனவை வழங்க அரசினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனால் வருடாமொன்றுக்கு சுமார் பத்து கோடி ரூபா மேலதிக செலவு ஏற்படும் என நிதி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றின் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தலா இரண்டு நிலையான தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தொலைபேசி இணைப்புகளுக்கான கட்டணமாக மாதாந்தம் சுமார் 35 லட்ச ரூபா செலுத்தப்படுகின்றது.

எனினும் தொலைபேசி கட்டணமாக 50000 ரூபா வழங்குவதனால் இந்தக் கட்டணத்தொகை மேலும் அதிகரிப்பதாகவும் ஆண்டு தோறும் சுமார் பத்து கோடி ரூபா மேலதிகமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

Powered by Blogger.