ஞானசாரருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு - விசாரணைகள் CID யிடம் ஒப்படைப்பு
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஞானசார தேரர் கடந்த ஜூன் 8 ஆம் திகதி வெளியிட்ட கருத்து தொடர்பில் பொரல்லையை சேர்ந்த ஒருவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஞானசார தேரரின் உரை அடங்கிய குறுந்தகட்டையும் முறைப்பாடு செய்த நபர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் ஞானசார தேரர் அடிக்கடி கருத்துக்களை வெளியிட்டு வருவது, இவர்களுக்கு எதிராக சிங்கள பௌத்தர்களை தூண்டி விடுவதாக குற்றம் சுமத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
Foul mouth n loose talker. Eat and defacates with same mouth.
ReplyDelete