Header Ads



லதீப் விவகாரத்தில், பூஜித்த மீதான நம்பிக்கை தகர்ந்ததா..?

-MFM.Fazeer-

பிர­புக்­களின் பாது­காப்பு உள்­ளிட்ட பல முக்­கிய நட­வ­டிக்­கைகள் பாரப்­ப­டுத்­தப்பட்­டுள்ள பொலிஸ் திணைக்­க­ளத்தின் ஒரு பிரிவே பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யாகும்.


பிர­புக்கள் பாது­காப்­புக்கு மேல­தி­க­மாக போதைப் பொருள் ஒழிப்பு, பயங்­க­ர­வாத எதிர்ப்பு மற்றும் கல­க­ம­டக்­குதல் உள்­ளிட்ட முக்­கிய பல பணி­களை முன்­னெ­டுக்கும் பொறுப்பு அதி­ர­டிப்­ப­டை­யிடம் தற்­போது உள்­ளது.

இத்­த­கைய பணி­களை  முன்­னெ­டுக்கும் பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டையின் புதிய கட்­டளைத் தள­ப­தி­யாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீபை  பொலிஸ் ஆணைக் குழு  கடந்த 8 ஆம் திகதி தேர்ந்­தெ­டுத்து 9 ஆம் திகதி அவரின் நிய­மனக் கடி­தத்தை பொலிஸ் மா அதி­ப­ருக்கு அனுப்­பி­யது.

எனினும் நேற்றுக் காலை வரை பல்­வேறு அர­சியல் அழுத்­தங்கள் கார­ண­மாக பொலிஸ் மா அதி­பரால் அந்த நிய­மனம் தொடர்பில் கட­மை­களை பொறுப்­பேற்­ப­தற்­கான நியமனக் கடி­தம் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் லத்தீ­பிடம் கைய­ளிக்­கப்பட்­டி­ருக்­க­வில்லை.

இந் நிலையில் ஊட­கங்­களும் பல்­வேறு தரப்­பி­னரும் இது தொடர்பில் தொடர்ச்­சி­யாக குரல் எழுப்­பிய நிலையில், நேற்று பொலிஸ் மா அதி­பரை இது தொடர்பில் கேள்வி கேட்க தேசிய பொலிஸ் ஆணைக் குழு தயா­ரான நிலை­யி­லேயே அந்த நிய­மனம் லத்தீ­புக்கு வழங்­கப்பட்­டது.

  பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டையின் கட்­டளைத் தள­ப­தி­யாக இருந்த ( ஒப்­பந்த அடிப்­ப­டையில் )பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் பெரே­ராவின் ஒப்­பந்த காலம் கடந்த 8 ஆம் திக­தி­யுடன் முடி­வ­டைந்­த­தை­ய­டுத்து கட்­டளைத் தள­பதி பத­வியில் வெற்­றிடம் ஏற்­பட்­டது.

இந் நிலையில் கடந்த 9 ஆம் திகதி அதி­ர­டிப்­படை கட்­டளைத் தள­ப­தி­யாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்­தீபை நிய­மிக்க அனு­ம­தி­ய­ளித்த பொலிஸ் ஆணைக் குழு அதற்­கான நிய­மனக் கடி­தத்தை பொலிஸ் மா அதி­ப­ருக்கு அனுப்பி வைத்­துள்­ளது. 

அதி­ர­டிப்­ப­டையின் கட்­டளை தள­ப­தி­யாக பொலிஸ்  மா அதிபர் பரிந்­து­ரைத்­த­வரே இந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப். அப்­படி இ­ருக்­கையில் அவ­ரையே அப்­ப­த­வியில் அமர்த்த ஆணைக் குழு அனு­ம­தி­ய­ளித்த போதும் அதனை வழங்க இத்­தனை இழுத்­த­டிப்பு ஏன் என்ற கேள்வி யாருக்கும் எழக் கூடும்.

ஆம், இது தொடர்பில் தான் நாமும் தேடினோம்.

அப்­போது தான் பல­ம்மிக்க அர­சியல் வாதியின் மகன் ஒருவர் தொடர்­பிலும் அதி­ர­டிப்­ப­டையின் தற்­போ­துள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் ஒருவர் தொடர்­பி­லான தக­வல்­கள் விடி­வெள்­ளி­யிடம் பதி­வா­கின.

அதி­ர­டிப்­படை கட்­டளைத் தள­பதி பத­வியை குறித்த சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­கருக்கு வழங்கும் முக­மாக குறித்த சக்தி மிக்க அர­சியல் வாதியின் மகனின் அழுத்தம் கார­ண­மாக இந்த இழுத்­த­டிப்பு செய்­யப்பட்­டுள்­ளமை தொடர்­பி­லான தகவல் அப்­போதே எம்மால் தெரிந்­து­கொள்ளக் கூடி­ய­தாக இருந்­தது.

உண்­மையில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப் அதி­ர­டிப்­படை கட்­டளைத் தள­பதி பத­விக்கு மிகப் பொருத்­த­மா­னவர். ஏனெனில் அவர் பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டையின் ஆரம்ப கால அங்­கத்­தவர்.

1979 ஆம் ஆண்டு உப பொலிஸ் பரி­சோ­த­க­ராக பொலிஸ் சேவையில் இணைந்த எம்.ஆர். லத்தீப் இலங்கை பொலிஸ் திணைக்­க­ளத்தில் பாது­காப்பு விவ­காரம் தொடர்­பி­லான மிக நீண்ட அனு­பவம் மற்றும் அறிவைக் கொண்­டவர் எனக் கரு­தப்­ப­டு­ப­வ­ராவார்.

தற்­போது பொலிஸ் பயிற்­சிகள் மற்றும் சர்­வ­தேச உற­வுகள் தொடர்­பி­லான விவ­கா­ரங்­க­ளுக்கும் பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ராக லத்தீப் கட­மை­யாற்­று­கின்றார். இந் நிலை­யி­லேயே அதற்கு மேல­தி­க­மாக அவரை அதி­ர­டிப்­ப­டையின் கட்­டளை தள­ப­தி­யாக நிய­மிக்க பொலிஸ் ஆணைக் குழு தீர்­மா­னித்­தி­ருந்­தது.

கடந்த அர­சாங்­கத்தின் காலப்ப­கு­தியில் அர­சியல் பழி­வாங்­கல்­க­ளுக்கு உள்­ளான சிரேஷ்ட பொலிஸ் அதி­கா­ரி­களில் எம்.ஆர். லத்தீப் மிக முக்­கி­ய­மா­னவர்.  
அதே நிலைமை அவ­ருக்கு இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தின் காலத்­திலும் நீடிக்­கின்றமை கவலைக் குரி­யது.

 தற்­போது பிர­புக்­களின் பாது­காப்பு  நட­வ­டிக்­கை­களை விஷேட அதி­ர­டிப்­ப­டையே முன்­னெ­டுத்து வரும் நிலையில் அதற்­கான கட்­டளை தள­ப­தி­யாக லத்தீபை நிய­மிப்­பது என ஆணைக் குழு தீர்­மா­னித்­தி­ருந்­தது.

 அவுஸ்­தி­ரே­லி­யாவில் இடம்­பெற்ற ஒலிம்பிக் போட்­டி­களின் போது, பயங்­க­ர­வாத தாக்­கு­தல்கள் இடம்­பெற்றால் அதனை எதிர்­கொள்­வது, தடுப்­பது தொடர்பில் சர்­வ­தேச பாது­காப்பு தரப்­புடன் இடம்­பெற்ற பேச்­சுக்­களின் பின்னர் அது குறித்த சிறந்த திட்­டத்தை முன்­வைத்­தவர் லத்தீப் ஆவார்.  

அமெ­ரிக்க, இங்­கி­லாந்து பாது­க­பபுத் துறை­யி­னரைத் தாண்டி பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான மிகச் சிறந்த திட்­டத்தை முன்­வைத்த இந்த அதி­காரி உண்­மை­யி­லேயே அப்­ப­த­விக்கு மிகப் பொருத்­த­மா­னவர் என்­பதை அதி­ர­டிப்­ப­டையின் பணி­க­ளுடன் ஒப்­பீடு செய்து நோக்கும் போது தெளி­வாகும்.

அத்­துடன் கடந்த வருடம் இலங்­கைக்கு விஜயம் செய்த பாப்­ப­ர­சரின் பாது­காப்பு திட்­டத்தை வகுக்கும் நட­வ­டிக்கை கூட   லத்தீ­பி­டமே கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது. இந் நிலையில் பிர­புக்­களின் பாது­காப்பு குறித்த அனு­பவம் திற­மை­களை மையப்ப­டுத்­தியே லத்தீ­புக்கு அதி­ர­டிப்­படை கட்­டளைத் தள­பதி பத­வியை ஆணைக் குழு வழங்க முன்­வந்­த­தாக ஆணைக் குழுவின் உள்­ளக தக­வல்கள் ஊடாக அறி­ய­மு­டி­கின்­றது.

 பொலிஸ் மா அதி­ப­ருக்கு எதி­ராக கிளி­நொச்சி சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் பாலித்த சிறி­வர்­தன அண்­மையில் உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்த அதிரடிப்­படை உரிமை மீறல் மனுவின் போது பிர­தம நீதி­ய­ரசர் தெளி­வான ஒரு அறி­விப்பை செய்­தி­ருந்தார்.

அதா­வது பொலிஸ் மா அதிபருக்கு, உதவி பொலிஸ் அத்தியட்சகர் தர நிலையில் இருந்து அதற்கு மேல் உள்ள உயர் அதிகாரிகளின் பதவி உயர்வு, இடமாற்றம் , நியமனம் தொடர்பில் எவ்வித முடிவினையும் எடுக்க முடியாது என்ற உண்மையே அதுவாகும்.

அந்த வகையில் அதற்கான உரிமை தேசிய பொலிஸ் ஆணைக் குழுவினருக்கே உள்ளது.

அப்படியாயின் பொலிஸ் ஆணைக் குழு வழங்கிய நியமனத்தை கையளிக்காது இழுத்தடிப்பு செய்தமையானது பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை தகர்க்கும் நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது. 

2 comments:

  1. சக்திமிக்க அரசியல்வாதியின் மகன் ?????????? அப்படியெனில் இன்னும் நாட்டில் சர்வதிகாரம் உள்ளதா ????????????

    ReplyDelete
  2. This is wrong. Because, IGP Has recommended DIG Latheef Name to the Police commission.
    I can say the reasons for the delay only is political intervention

    ReplyDelete

Powered by Blogger.