Header Ads



சிறுநீரக நோயென கூறி, பணம் சேகரிக்க சென்றவர் இரத்தினக்கல் திருட்டு

இரண்டு மாணிக்கக் கற்களை திருடியதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை பிரதேசவாசிகள் மடக்கிப் பிடித்து பேருவளைப் பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்காக பணம் சேகரிக்கும் முகமாக வீடு வீடாகச் சென்றுள்ள நபர் ஒருவரே பேருவளைப் பகுதியில் வீடொன்றில் இரத்தினக் கல் பட்டைதீட்டும் இடத்திற்குச் சென்று இரத்தினங்களை திருடியுள்ளார்.

இரத்தினக் கல் பட்டை தீட்டுபவர் சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு உதவி கேட்டு வந்தவருக்கு பணம் கொடுக்க தனது வீட்டின் அறைக்குள் சென்ற சமயம் இத் திருட்டு இடம்பெற்றுள்ளது.

வீட்டு வேலைக்காரி இரத்தினக் கற்களை சந்தேக நபர் களவாடுவதை கண்டு உரிமையாளரிடம் கூறியதை யடுத்து பிரதேச வாசிகளின் உதவியுடன் இவர் மடக்கிப் பிடிக்கப்பட்டார். பின்னர் மக்கள் இவரை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பேருவளை பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.