Header Ads



ஹிலாரி கிளிண்டன் தான் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை உருவாக்கியவர் - டொனால்ட் டிரம்ப்

ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் தான் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை உருவாக்கியவர் என டொனால்ட் டிரம்ப் அதிரடியாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் நேற்று புளோரிடாவில் உள்ள Daytona கடற்கரையில் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.

அப்போது, ‘ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை எதிரணியில் உள்ள ஹிலாரி கிளிண்டன் தான் உருவாக்கினார்’ என அதிரடியாக பேசியுள்ளார்.

மேலும், இதுபோன்ற ஒரு இயக்கத்தை உருவாக்கியதற்காக அந்த தீவிரவாத அமைப்பிடம் இருந்து ஹிலாரி ஒரு பெரிய பரிசை பெற வேண்டும் என டிரம்ப் கருத்து தெரிவித்தார்.

ஐ.எஸ் தீவிரவாதிகள் நாடு முழுவதும் உள்ள நகரங்களில் நடத்திய பயங்கர தாக்குதல்களை பட்டியலிட்ட டிரம்ப், இதுபோன்ற தாக்குதல் நடைபெற்றதற்கு வெளியுறவு துறை அமைச்சராக இருந்த ஹிலாரியின் பலவீனமான கொள்கைகள் தான் காரணம்.

ஹிலாரியின் மோசமான கொள்கைகள் தான் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உருவாக காரணமாக இருந்துள்ளது என டிரம்ப் சாடியுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதை தொடர்ந்து ’ஹிலாரியை சிறையில் அடையுங்கள்’ என டிரம்பின் ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. உண்மையை சொன்னால் நாம் நம்ப மாட்டோம் அல்லாஹ் கெட்டவனைக்,கொண்டே உண்மையை வெளியே வர செய்யும் ஆற்றல் உள்ளவன் உலகின் பயங்கரவாதி அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது

    ReplyDelete

Powered by Blogger.