Header Ads



ஓடர்செய்த பிட்ஸா, உரியநேரத்தில் வரவில்லை - நீர்கொழும்பு பொலிஸில் முறைப்பாடு


உரிய நேரத்தில் பீட்சா கிடைக்கவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டில் நடைபெற்ற விருந்துபசாரமொன்றுக்காக பீட்சா ஓர்டர் செய்த நபர் ஒருவர், உரிய நேரத்தில் அவை விநியோகம் செய்யப்படவில்லை என அதிருப்தி அடைந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

நீர்கொழும்பில் அமைந்துள்ள பிரபல பீட்சா விற்பனை நிலையமொன்றுக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு கிழக்கு பலாங்குதுறை பகுதியைச் சேர்ந்த சன்ன முத்துவடுகெ அன்டன் பெர்னாண்டோ என்ற நபரே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த 22ஆம் திகதி வீட்டில் நடைபெற்ற விருந்துபசாரமொன்றுக்காக பீட்சா விநியோகம் செய்யுமாறு கோரி குறித்த நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், 7.30 மணி வரையிலும் பீட்சா விநியோகம் செய்யப்படாமையினால் அதிருப்தி அடைந்த குறித்த நபர், நீர் கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.