Header Ads



நான் மேல்மாகாண ஆளுநரா..?


-விடிவெள்ளி ARA.Fareel-

தற்­போது இரா­ஜாங்க அமைச்சராக பதவி வகித்து வரும் தன்னை மேல் மாகாண ஆளு­ந­ராக நிய­மிக்க ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாக பரப்­பப்­பட்டு வரும் செய்­தியில் எது­வித உண்­மை­யு­மில்லை என தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி தெரி­வித்தார். 

சிலர் வேண்­டு­மென்றே இவ்­வா­றான பொய் வதந்­தி­களைப் பரப்பி வரு­வ­தா­கவும் தான் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பினர் எனவும் அவர் கூறினார். 

நாட்டில் தேசிய ஒரு­மைப்­பாட்­டுக்கும் நல்­லி­ணக்­கத்­துக்­கு­மென தனி­யான ஒரு அமைச்சு ஜனா­தி­ப­தி­யினால் அமைக்­கப்­பட்டு தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் சந்­தர்ப்­பத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இவ்­வா­றான மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­த­மாட்டார் என்றும் அவர் தெரி­வித்தார். 

தங்­க­ளுக்கு மேல் மாகாண ஆளுநர் பதவி வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக செய்­திகள் வெளி­வந்­துள்­ள­னவே இத்­த­க­வல்­களை உறு­திப்­ப­டுத்­து­கி­றீர்­களா? என்று வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.