Header Ads



நிம்மதியின்றி நித்திரை, கொள்ளும் நிலை - நாமல் வேதனை

நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தின் அபிவிருத்திகளை தேடி பார்க்காத இந்த அரசாங்கம் கடந்த கால ஆட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக தேடி பார்ப்பதற்கு பணத்தையும் நேரத்தையும் வீனாக்குகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கூறியுள்ளார்.

கினிகத்தேனை ரஞ்சுராவ பிரதேசத்தில் அமைந்துள்ள பீடாஸ் மண்டபத்தில் (14) இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

மஹிந்தவின் குடும்பத்தினரையும்,அவர்களுடன் செயல்பாடுகளையும் எப்.சீ.ஐ.டீ என்ற ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கோடி கணக்கில் பணத்தை செலவு செய்து ஆராய்ந்து வருகின்றனர். ஆனால் நாட்டில் எந்தவொரு அபிவிருத்தியையும் இதுவரை முன்னெடுக்கவில்லை. ஊழல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இயங்கும் எப்.சீ.ஐ.டீ காரியாலயத்திற்கு சென்றால் அங்குள்ள அனைத்து அறைகளிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிறேனவின் உருவப்படங்களே காட்சியளிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது ஜனாதிபதியின் பொலிஸ் பிரிவு என்பதாலா ? என பாராளுமன்ற உறுப்பினரும், முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ கேள்வி ஒன்றையும் எழுப்பியுள்ளார்.

மாகாண மற்றும் மாவட்டங்கள் ரீதியாகவும், பிரதேசங்கள் ரீதியாகவும் எதிர்வரும் காலத்தில் புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கென அங்குள்ள அமைப்பாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், வர்த்தகர்கள் ஆகியோரை உள்ளடக்கி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த வகையில் நாட்டில் அடுத்த வரவு செலவு திட்டத்தை முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபஸவினால் முன்னெடுக்கப்படும் என்பதில் அச்சம் இல்லை எனவும் இதன்போது கூறியுள்ளார்.

நாட்டில் யுத்த காலத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்கா விசாரணைகளை மேற்கொள்ள இன்றைய அரசு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளது.

இந்த வகையில் நமது நாட்டு இராணுவத்தினரை இந்த அரசாங்கம் காட்டிக்கொடுக்க செயல்படுகின்றது. ஆனால் எமது அரசாங்கத்தில் வெளிநாட்டு நடவடிக்கைகளை நம் நாட்டில் உள்வாங்குவதற்கு இடமளிக்கவில்லை.

இந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினர் மட்டுமன்றி கடந்த ஆட்சியில் உள்ள அணைவரும் நிம்மதி இன்றி நித்திரை கொள்ளும் நிலைக்கு அரசாங்க செயல்பாடுகள் காணப்படுகின்றது.

கினிகத்தேனையிலிருந்து கொழும்புக்கு சென்று நேரடியாக வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்லும் நிலையினேயே அரசாங்கம் எம்மீது தினிக்கின்றது. பாத யாத்திரையின் போது எமது கோரிக்கைகளை மக்களோடு இணைந்து கோஷம் இட்டுக்கொண்டு இருக்கையில் கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்தது.

இதன் பின்னர் அவர்கள் நினைத்தவாறு என்னை சிறைக்கு அனுப்பினர். இது அல்ல அரசாங்கத்தின் வேலை. மக்களுடைய அபிவிருத்தி தொடர்பில் ஆராய்ந்து மக்கள் சேவையை முன்னெடுக்க வேண்டும் என தெரிவிக்கின்றேன்.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை கைப்பற்றினால் உலக நாடுகள் நிதி உதவிகளை செய்வார்கள் என்ற நிலை இருந்தது.

ஆனால் மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்திற்கே கூடிய அளவில் அபிவிருத்திக்கான நிதி வழங்கப்பட்டுள்ளது.

கேகாலை அரநாயக்க பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதா ?

கொழும்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதா ? என்ற பல்வேறு கேள்விகளுக்கு இந்த அரசாங்கம் ஆளாகி உள்ள நிலையில் பழி வாங்கும் எண்ணங்களை கை விடுதல் வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.பீ. ரத்நாயக்க அம்பகமுவ பிரதேச சபையின் முன்னால் உறுப்பினர் எலப்பிரிய நந்தராஜ், தலவாக்கலை லிந்துலை நகர சபையின் முன்னால் தலைவர் அசோக சேபால மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. இவ்வாறான பங்குரோத்து அரசியல்வாதிகளின் கூட்டத்தில் முன்னாள் பி,ச மா,ச உறுப்பினர்கள் கலந்து கொள்வது வழக்கம்

    ReplyDelete
  2. உமக்கெல்லாம் நிம்மதி எங்கே கிடைக்கப்போகுது அது படைத்தவனிடத்தில் உள்ளது,உம்மைப் போன்றவர்களுக்கு அது இனிமேல் கிடைக்காது ஏனெனில் அரசன் அன்று அறுப்பான் நல்லாவே அறுத்தீன்க படைத்தவன் நின்றறுப்பான் இப்போது அவன் அறுக்கின்றான் நன்றாக அனுபவியுங்க

    ReplyDelete

Powered by Blogger.