Header Ads



நல்லாட்சி அரசின் கொண்டாட்டம் - அரச நிதி, சொத்துக்களுக்கு இடமில்லை - ரணில் கடும் உத்தரவு

நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தின் முதலாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்வின் நிமித்தம் அரச நிதி வளங்கள் அல்லது சொத்துக்களை பயன்படுத்த வேண்டாம் என்று அதன் ஏற்பாட்டாளர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. 

தேசிய அரசாங்கத்தின் முதலாவது ஆண்டு நிறைவு விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாத்தறை, சனத் ஜயசூரிய மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.  

முதலாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்வின் போது, கடந்த ஒரு வருட காலத்தில் தேசிய அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிய முறை குறித்து விபரித்து தெளிவுபடுத்தும் சந்தர்ப்பமொன்றும் ஏற்பாடாகியுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.  

தேசிய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக குறைந்த செலவில் கூட்டமொன்றை மட்டும் நடத்தி இந்த விழாவை நிறைவு செய்து கொள்ள ஜனாதிபதியும் பிரதமரும் தீர்மானித்திருப்பதாகவும் மேற்படி வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டன. 

No comments

Powered by Blogger.