Header Ads



'சிங்­ஹலே' ஸ்டிக்­கர்­களுக்கு மாற்றீடாக, வருகிறது புதிய திட்டம் - ஜனாதிபதியும் பச்சைக்கொடி

நாட்டில் இன­வா­தத்தைப் பரப்பும் வகை­யி­லான சிங்ஹ லே அமைப்பின் ‘சிங்­ஹலே’ ஸ்டிக்­கர்­களை பொது போக்­கு­வ­ரத்து சேவையில் ஒட்டிக் கொள்ள வேண்­டா­மென அறி­வு­றுத்­தி­யுள்ள தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான அமைச்சு தேசிய ஒரு­மைப்பாட்டு­ பாட்­டி­னையும் இன நல்­லி­ணக்­கத்­தையும் உரு­வாக்கும் வகை­யி­லான ஸ்டிக்­கர்­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன.

அடுத்த மாத நடுப்­ப­கு­தியில் இந்தப் புதிய ஸ்டிக்­கர்கள் பொது போக்­கு­வ­ரத்துச் சேவை­க­ளான பஸ் மற்றும் புகை­யி­ர­தங்­க­ளிலும் ஒட்­டப்­ப­ட­வுள்­ளன. மற்றும் முச்­சக்­கர வண்­டிகள், வாக­னங்­க­ளிலும் இந்த ஸ்டிக்­கர்­களை மக்கள் ஒட்­டிக்­கொள்ள வேண்­டு­மென அமைச்சு கோரிக்கை விடுக்­க­வுள்­ளது.

சிங்­களம், தமிழ், ஆங்­கிலம் ஆகிய மூன்று மொழி­க­ளிலும் இந்த ஸ்டிக்­கர்கள் தயா­ரிக்­கப்­ப­ட­வுள்­ளன. இதற்­கான அனு­ம­தியை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வழங்­கி­யுள்ளார்.

தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி இது தொடர்பில் விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­விக்­கையில்;

‘தற்­போது பஸ்­க­ளிலும் ஏனைய வாக­னங்­க­ளிலும் சிங்­­ஹலே எனும் அமைப்பு ஸ்டிக்­கர்­களை ஒட்­டி­யி­ருப்­பது முஸ்­லிம்கள் மற்றும் தமிழ் மக்­களின் மத்­தியில் ஒரு­வித அச்ச நிலையை உரு­வாக்­கி­யுள்­ளது.

தேசிய அர­சாங்கம் நாட்டில் நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்தி இனங்­க­ளுக்கு இடையில் நல்­லி­ணக்­கத்­தையும் மற்றும் தேசிய ஒரு­மைப்­பாட்­டி­னையும் வளர்ப்­ப­தற்கு முயற்­சித்து வரு­கையில் சிங்­ஹலே ஸ்டிக்கர் மூலம் அதற்கு குந்­தகம் ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர்.

நாம் அனை­வரும் ஒரே இரத்­தத்­தையே கொண்­டுள்ளோம். எமது அனை­வ­ரி­னதும் இரத்தம் சிகப்பு நிற­மா­ன­தாகும்.

இந்த சுலோ­கங்­க­ளுடன் நேற்று திங்­கட்­கி­ழமை கொழும்பில் நடத்­தப்­பட்ட விழிப்­பு­ணர்வு நிகழ்ச்­சி­யொன்று சிங்­ஹலே அமைப்­பி­னரால் குழப்­பப்­பட்­டுள்­ளது. இது தவ­றா­ன­தாகும். விழிப்­பு­ணர்வு நிகழ்வில் கலந்து கொண்­ட­வர்கள் இன நல்­லி­ணக்­கத்­தையே வலி­யு­றுத்­தி­னார்கள்.

இதற்கு விரோ­த­மாக சிங்­ஹலே அமைப்பு ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­ப­டு­வது சட்­ட­வி­ரோ­த­மா­ன­தாகும். தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான அமைச்சின் இன நல்­லி­ணக்­கத்தை வலி­யு­றுத்தும் ஸ்டிக்­கர்­க­ளுக்கு பொது மக்கள் தமது பூரண ஆத­ர­வினை வழங்க வேண்டும். இன, மத, மொழி வேறு­பா­டு­க­ளின்றி மக்கள் இதனை ஆத­ரிக்க வேண்டும்.

அடிப்­படை உரி­மை­களை மதிக்கும் சட்ட விதிகள், சமத்­துவம் மற்றும் பன்­மைத்­து­வத்­தினைப் பாது­காத்து சகல பிர­ஜை­களும் தமது இனம், சமயம், மொழி, சாதி, வயது, பால், பாலினம், பிறப்பிடம் மற்றும் அரசியல் கொள்கைகள் என்பவற்றினை வேற்றுமையாகக் கொள்ளாது கௌரவமாக வாழ்வதற்குத் தேவையான சமூகம் ஒன்றினைக் கட்டியெழுப்புவதே தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான அமைச்சின் திட்டப் பணியாகும் என்றார்.

9 comments:

  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  3. நாட்டில் சமாதானத்தை கட்டி எழுப்பும் தங்கள் பணிக்கு எமது ஒத்துழைப்பு என்றும் உங்களுக்கு.....

    ReplyDelete
  4. Excellent justification MR PRESIDENT. Bravo

    ReplyDelete
  5. Excellent decision MR PRESIDENT.
    B R A V I

    ReplyDelete
  6. குதிரையைவிட்டு் வாலைப பிடிக்கி்ற கதைதான்்

    ReplyDelete
  7. Wright action for wright time

    ReplyDelete

Powered by Blogger.