Header Ads



மடவளையில் இஸ்லாமிய ஒன்றுகூடல்

மடவளையில் இன்று (5.8.2016) இடம்பெறும் இஸ்லாமிய ஒன்று கூடல் நிகழ்வில் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள சிறுவர் நலத்துறை விசேட வைத்திய நிபுனர் கே.வீ.எஸ்.ஹபீப் முஹம்மத் விசேட பேச்சாளராகக் கலந்துகொள்கிறார்.

அகில இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் மடவளைக் கிளை ஒழுங்கு செய்துள்ள பிராந்திய இஜ்திமா என்ற நிகழ்வு இன்று மடவளை மதீனா மத்திய கல்லூரி அஷ்ரப் கேட்போர் கூடத்தில் பி.ப.4.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை நடைபெற ஏற்பாடாகி உள்ளது. 

'உள்ளத்தை உயிரூட்டுவதற்கு உலகத்தில் வழிசொல்லும் இறை தியானம்' பற்றி சொற்பொழிவுகள் அடங்கிய இந்கழ்வில்  அகில இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் உஸ்தாத் ரசீட் ஹஜ்ஜூல் அக்பர் அஷ்ஷெய்க் ஹூஸ்னி முபாரக் அகியோரும் சொற்பொழிவாற்றுவர். 

விசேட உரை நிகழ்த்தும் டாக்டர் கே.வீ.எஸ்.ஹபீப் முஹம்மத் அவர்கள் இந்தியாவைச் சேர்ந்த பிரபல நூலாசியாகளில்; ஒருவராவார். இவர் 11 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இது தவிர அவர் பிரபல சொற்பொழிவுகள் 800 மேற்பட்டவற்றை நிகழ்த்தி பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியவராவார்.

சென்னை இஸ்லாமிய தகவல் மையத்தின் நிறுவுனரான இவர் சிறுவர் நலத்துறை விசேட வைத்திய நிபுனராவார். இந்தியாவில் பிரபலமான 'மானுட வசந்தம்' என்ற நிகழ்சியைத் தொடராக கடந்து 16 வருடங்களாக நடத்தி பலரதும் பாராட்டப் பெற்றவராவார்.

எனவே சகலரும் கலந்து இதில் பயனடையுமாறு வேண்டப்படுகி;ன்றனர்.

No comments

Powered by Blogger.