Header Ads



வெளிநாட்டமைச்சின் கவனத்திற்கு...!

இலங்கையில் கணனிமயப்படுத்தப்பட்ட புதிய தேசிய அடையாள அட்டை வழங்கும் பணி ஆரம்பமாகியுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதுவர் ஆலயங்கள் ஊடாகவும் இப்பணியை மேற்கொள்வது வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைவதுடன் ஙெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் பற்றிய ஒரு பூரண தகவலை அந்தந்த நாட்டு தூதுவராலயங்கள் பெற்றுக்கொள்ள ஒரு சந்தர்ப்பமாகவும் அமையும்.

அதுமாத்திரமல்ல, எதிர்காலங்களில் இலங்கையர்கள் வெளிநாடுகளில் இருந்தபடியே தேர்தலில் வாக்களிக்கவும் வழி ஏற்படும்.

தேசிய அடையாள அட்டைகளை வெளிநாடுகளில் வினியோகிப்பதன் மூலம் கனிசமான அளவு லாபத்தை இலங்கை வெளிநாட்டமைச்சு பெற்றுக்கொள்ளவும் முடியும்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபற்றி ஆலோசிக்கலாமே!

முஹம்மத் பாயிஸ்
ஜித்தா - சவூதி அரேபியா

No comments

Powered by Blogger.